New Update
/indian-express-tamil/media/media_files/2RV2PrAosHwqPYkClHyD.jpg)
கோவை அருகே கருமத்தம்பட்டி நிறுத்தத்தில் நிறுத்த மறுத்ததால் பொதுமக்கள் பேருந்தை சிறைபிடித்து வாக்குவாதம்
கோவை அருகே கருமத்தம்பட்டி நிறுத்தத்தில் நிறுத்த மறுத்ததால் பொதுமக்கள் பேருந்தை சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அருகே கருமத்தம்பட்டி நிறுத்தத்தில் நிறுத்த மறுத்ததால் பொதுமக்கள் பேருந்தை சிறைபிடித்து வாக்குவாதம்
கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து அவிநாசி சாலை வழியாக திருப்பூருக்கு ஏராளமான தனியார் மற்றும் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் காந்திபுரத்தில் திருப்பூர் செல்லும் கே.எம்.எஸ் என்ற தனியார் பேருந்தில் கருமத்தம்பட்டி செல்வதற்காக சில பயணிகள் ஏறி உள்ளனர்.
பேருந்து கிளம்பிய நிலையில் நடத்துனர் கருமத்தம்பட்டியில் பேருந்து நிறுக்காது என கூறி அவர்களை திட்டி பாதி வழியிலேயே இறக்கி விட்டதாக கூறப்படுகிறது. பேருந்தில் இருந்து இறங்கிய பயணிகள் இதுகுறித்து ஊர்பொது மக்களுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளனர்.
கோவை அருகே கருமத்தம்பட்டி நிறுத்தத்தில் நிறுத்த மறுத்ததால் பொதுமக்கள் பேருந்தை சிறைபிடித்து வாக்குவாதம்: வைரல் வீடியோ pic.twitter.com/tIYrbe0fck
— Ellappan (@EllappanYa43462) September 5, 2024
பேருந்து கருமத்தம்பட்டி அருகே வந்தபோது சுற்றி வளைத்து சிறைபிடித்த ஊர் பொதுமக்கள் ஓட்டுநர் மற்றும் நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கு வந்த போலீசார் இரு தரப்பினரிடமும் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
ஊர் பொதுமக்கள் பேருந்தை தடுத்து நிறுத்தி சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட செல்போன் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.