New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/08/cats-20.jpg)
இது கூட பரவாயில்லை. வளர்ப்பவர் கல்யாணம் செய்துகொள்கிறாயா என்று கேட்டவுடன், மியாவ் மியாவ் மியாவ் என்று ஓவர் குஷியில் பதில் அளிக்கிறது
வளர்ப்பு பிராணிகளுக்கும் மக்களுக்கும் இடையே இருக்கும் அன்பானது அபரிதமானது என்று தான் கூற வேண்டும். நாய்களும் பூனைகளும் இருக்கும் வீட்டில் மன அழுத்தம் குறைவாக இருப்பது வாஸ்தவமான ஒன்று. எப்போதும் பூனைகளின் வைரல் வீடியோ என்றால் உடனே வெளிநாட்டினரின் வீடியோக்கள் தான் மனதில் வரும். ஆனால் இங்கு ஒருவர் தன் செல்லக்குட்டியுடன் பேசும் வீடியோவை பாருங்கள். பூனை சுத்த அசைவம் போல, சாம்பார் சாதம் வேண்டாமாம், ரசம் சாதம் வேண்டாமாம், தயிர் வேண்டாமாம், காரக் குழம்பும் வேண்டாமாம். ஆனால் பாருங்கள் வறுத்த கறி துண்ணுறியா என்று கேட்கிறார். உடனே பூனை ஏகோபித்த சந்தோசத்தில் மியாவ் மியாவ் என்று அத்தனை ஆசையாய் பதில் சொல்கிறது. வறுத்த கறி வேண்டுமாம், சிக்கன் வேண்டுமாம். ஆனால் காரக் குழம்பு வேண்டாமாம்.
இது கூட பரவாயில்லை. வளர்ப்பவர் கல்யாணம் செய்துகொள்கிறாயா என்று கேட்டவுடன், மியாவ் மியாவ் மியாவ் என்று ஓவர் குஷியில் பதில் அளிக்கிறது அந்த செல்லப் பூனை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.