சொந்த காசில் சூனியம் வைத்த கதை! கார் கண்ணாடியை உடைக்க முயன்ற திருடனுக்கு நேர்ந்த கொடுமை

எதையாவது திருடலாம் என திட்டம் போட்டு அதை செயல்படுத்த களத்தில் இறங்கினான்.

எதையாவது திருடலாம் என திட்டம் போட்டு அதை செயல்படுத்த களத்தில் இறங்கினான்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
viral trending video

viral trending video

viral trending video :கார் கண்ணாடியை உடைத்து திருட முயற்சித்த திருடனுக்கு அந்த கணமே கிடைத்த சுவாரசிய தண்டனை இணையத்தில் வைரலாகியுள்ளது. கர்மா உடனே வேலை செய்த அந்த தருணம் அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.

Advertisment

இதுக்கு பெயர் தான் சொந்த காசில் சூனியம் வைப்பதோ.. இங்கிலாந்தில் மருத்துவர் ஒருவர் தனது காரை ரோட்டில் பார்க்க செய்து விட்டு அருகில் இருக்கும் கடைக்கு சென்றார். இதைப்பார்த்துக் கொண்டுடிருந்த திருடன் நைசாக காரின் கண்ணாடியை உடைத்து எதையாவது திருடலாம் என திட்டம் போட்டு அதை செயல்படுத்த களத்தில் இறங்கினான்.

ஆனால், பாவம் இறுதியில் நடந்ததே வேற.கார் கண்ணாடியை உடைக்க திருடன் பெரிய சைசில் கல்லை எடுத்தான். அதை வேகமாக சென்று கண்ணாடி மீது தூக்கி எறிந்தான். ஆனால் விதி அந்த கல் அப்படியே திரும்பி வந்து திருடன் மூக்கில் விழுந்தது.

Advertisment
Advertisements

அப்பா என்னா அடி.. கல்லின் வலியை தாங்கிகொள்ள முடியாமல் திருடன் திணறுகிறான். கூடவே எப்படி கல் திரும்பி அடித்தது எனற குழப்பம் வேறு. இந்த வீடியோ கடந்த 2 நாட்களாக இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இதைக் கொண்டு திருடனை பிடிக்க இங்கிலாந்து காவல் துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இணையத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ இதுவரை மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: