Advertisment

எரியும் கட்டிடத்தில் இருந்து 2 குழந்தைகளை மீட்ட காவல்துறை அதிகாரி; வைரல் வீடியோ

15 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் இந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

author-image
WebDesk
New Update
எரியும் கட்டிடத்தில் இருந்து 2 குழந்தைகளை மீட்ட காவல்துறை அதிகாரி; வைரல் வீடியோ

Viral video of brave cop saves two children : லண்டனில் அமைந்துள்ள எலிபேண்ட் மற்றும் காஸில் ரயில் நிலையங்களில் ஏற்பட்ட தீவிபத்தின் போது இரண்டு குழந்தைகளை காப்பாற்றிய காவல்துறையினரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertisment

மிரர் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியின் படி, 15 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் இந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அப்பகுதியில் அமைந்திருந்த மூன்று வர்த்தக கட்டிடங்களில் எரிந்த தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 6 பேர் தீக்காயத்திற்கு ஆளான நிலையில் அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

இந்த விபத்துக்கான காரணங்கள் ஏதும் தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகின்ற நிலையில் காவல்துறையினரின், தீயணைப்பு துறையினரின் இந்த மகத்தான சேவையை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். இந்த வீடியோ குறித்து உங்களின் கருத்து என்ன என்பதை எங்களுக்கு கீழே கமெண்ட்டில் தெரிவிக்கவும்.

Trending Viral Video
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment