New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/10/cats-4.jpg)
கரும்பு ஏற்றி வரும் லாரிகளில் இருந்து கரும்பு சாப்பிடுவதற்காக யானைகள் பல ஆசனூரில் உள்ள காரப்பள்ளம் மற்றும் தாளவாடி சோதனை சாவடிகள் பக்கம் அதிகம் சுற்றுவது வழக்கம்.
Viral video of Elephant charged pickup truck : ஈரோடு சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் யானைகளின் எண்ணிக்கை அதிகம். அவ்வபோது உணவு தேவைகளுக்காகவும், நீருக்காகவும் காட்டில் இருந்து வெளியேறி மக்கள் வாழும் பகுதிக்கு வருவது, சாலைகளை கடப்பது என்பது வழக்கமாக மாறிவிட்டது.
கரும்பு ஏற்றி வரும் லாரிகளில் இருந்து கரும்பு சாப்பிடுவதற்காக யானைகள் பல ஆசனூரில் உள்ள காரப்பள்ளம் மற்றும் தாளவாடி சோதனை சாவடிகள் பக்கம் அதிகம் சுற்றுவது வழக்கம். நேற்று, பண்ணாரி சோதனைச் சாவடி வழியே சென்ற பிக்கப் வண்டி ஒன்றை மறித்த யானை அதில் கரும்பு இருக்கிறது என்று எண்ணி அதனை உலுக்க ஆரம்பித்தது. யானையை பார்த்த ஓட்டுநர், வண்டியில் இருந்து இறங்கி வெகுதூரம் ஓடிவிட்டார்.
நீங்க ரொம்ப நல்ல ஆஃபிசர்… மீட்டெடுத்த வனத்துறை அதிகாரியை கட்டிக்கொண்ட குட்டியானை
அந்த வண்டிக்கு அடுத்து வந்த வண்இ ஒன்று பயங்கர சத்தத்துடன் தொடர்ந்து ஒலி எழுப்ப அங்கிருந்து காட்டுக்குள் கோபத்துடன் ஓடி மறைந்தது யானை. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.