viral video twitter meera mitun : 2019 ஆம் ஆண்டு தீபாவளி தமிழகத்திற்கு சோகமான நாளாக மாறிவிட்டது என்றுதான் கூற வேண்டும். சிறுவன் சுஜித் உயிரிழந்த துக்கத்தில் இருந்து தமிழகம் இன்னும் மீளவில்லை. அரசியல் தலைவர்கள் தொடங்கி, பொதுமக்கள், சினிமா பிரபலங்கள் பலரும் சுஜித் பற்றி தான் பேசி வருகின்றனர்.
ஆழ்துளை கிணற்றில் சிறுவன் சிக்கிக் கொண்டிருந்த போது அவன் மீண்டும் உயிரோடு வரவேண்டும் என்று பிராத்தனை செய்த கூட்டம் ஏராளம். ஜாதி, மதம், மொழி கடந்து அனைவரும் சிறுவன் சுஜித்துக்காக வேண்டினர். இருந்த போதும் அனைவரின் எதிர்பார்ப்பும் பொய்யாக சுஜித் மரணமடைந்தான்.
சுஜித் ஆழ்துளை கிணற்றில் மாட்டிக் கொண்ட நாளிலிருந்து சர்ச்சை நாயகியான மீரா மிதுன் ட்விட்டரில் தொடர்ந்து இதுக் குறித்த வீடியோக்களை வெளியிட்டார். குறிப்பாக தமிழக அரசை கடுமையாக விமர்சித்தும் வீடியோ ஒன்றை தீபாவளி முந்தைய நாள் அன்று மீரா வெளியிட்டிருந்தார். இந்நிலையில், சிறுவன் உயிரிழந்ததை தொடர்ந்து மற்றொரு வீடியோவை மீரா ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. வீடியோவை பார்த்த பலரும் மீரா, சுஜித்தை பயன்படுத்தி தனி விளம்பரம் தேடுவதாக விமர்சித்துள்ளனர். அதுமட்டுமில்லை மீராவை இதுப்போன்ற செயல்களில் ஈடுப்பட வேண்டாம் என்று எச்சரித்துள்ளனர்.
அந்த வீடியோவில் மீரா பேசியிருப்பது இவைதான்.” 2 வயது பாலகனை நாம் மண்ணுக்கு இரையாக்கியிருக்கிறோம். ஒவ்வொரு குடிமகனும் பொறுப்பேற்க வேண்டிய விஷயம். சுஜித் நீங்க பிறந்தது ஒரு காரணத்திற்காக. நீங்க போராடி ஒரு வீரராக இறந்திருக்கிறீர்கள். உங்களை ஒரு தியாக செம்மலாகத் தான் நான் பார்க்கிறேன்.
#ripsujith You sacrificed ur life for all of the children like you. @cineulagam @PTTVOnlineNews @ThanthiTV pic.twitter.com/KhBIe9FNVO
— Meera Mitun (@meera_mitun) October 28, 2019
இதற்கு பிறகு எத்தனையோ குழந்தைகள் இறக்காமல் இருப்பதற்காக நீங்க உங்கள் வாழ்க்கையை தியாகம் செய்திருக்கிறீர்கள். போராடி உயிரை விட்டுள்ளீர்கள்.” என்று கூறியுள்ளார்.
Sloppy incautious error-ridden spur of the moment actions of TN government @EPSTamilNadu has led to this misery of a family infront of their teary blooded eyes. Only after global media attention, politicians emerged in the scenario. @cineulagam @ThanthiTV @PTTVOnlineNews pic.twitter.com/BIjGkEynHl
— Meera Mitun (@meera_mitun) October 29, 2019
”சுஜித் பெற்றோர் தற்போது எவ்வளவு கஷ்டத்தில் இருப்பார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. உங்களின் குழந்தை பெரிய தியாகம் செய்திருக்கிறார்.. இதுவே பெரிய குடும்பத்து பிள்ளையாக இருந்திருந்தால் உடனே காப்பாற்றப்பட்டிருப்பார்.” என்று மீரா கண்ணீருடன் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.