தாய் பாசம்: எட்டாத பலாவை எட்டிப் பறித்து குட்டியின் பசியைப் போக்கிய தாய் யானை!

தாய் யானை எட்டாத மரத்தில் உள்ள பலாப்பழங்களைத் தும்பிக்கையால் பறித்து, தன் குட்டிக்கு ஊட்டிய அற்புத காட்சியை, அவ்வழியே சென்ற ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

தாய் யானை எட்டாத மரத்தில் உள்ள பலாப்பழங்களைத் தும்பிக்கையால் பறித்து, தன் குட்டிக்கு ஊட்டிய அற்புத காட்சியை, அவ்வழியே சென்ற ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

author-image
WebDesk
New Update
elephant pala

தாய் பாசம்: எட்டாத பலாவை எட்டிப் பறித்து குட்டியின் பசியைப் போக்கிய யானை!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த வால்பாறை பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, யானை, சிறுத்தை, காட்டெருமை போன்ற விலங்குகள் அடிக்கடி வனப்பகுதியிலிருந்து வெளியேறி, தேயிலைத் தோட்டப் பகுதிகளிலும் உலா வருகின்றன. 

Advertisment

இந்த நிலையில், வால்பாறை முடீஸ் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்திற்கு உணவு தேடி குட்டியானையுடன் வந்த தாய் யானை ஒன்று, அனைவரையும் வியக்க வைக்கும் செயலைச் செய்துள்ளது. அங்குள்ள ஒரு பலா மரத்தில் உள்ள பழங்களை, தன் தும்பிக்கையால் எட்டிப் பறிக்க முயன்றது. எட்டாத உயரத்தில் இருந்த பழங்களையும் சாமர்த்தியமாக எட்டிப் பறித்த தாய் யானை, முதலில் தானும் உண்டுவிட்டு, பின்னர் தன் குட்டியானைக்கும் வழங்கி அதன் பசியைப் போக்கியது.

தாய் யானை எட்டாத மரத்தில் உள்ள பலாப்பழங்களைத் தும்பிக்கையால் பறித்து, தன் குட்டிக்கு ஊட்டிய இந்த அற்புதமான காட்சியை, அவ்வழியே சென்ற ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறது. இது தாய்மையின் அன்பையும், யானைகளின் புத்திசாலித்தனத்தையும் வெளிப்படுத்துவதாக உள்ளது.

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: