New Update
/tamil-ie/media/media_files/uploads/2018/06/1-9.jpg)
தேச துரோகிகள் குறித்து படத்தில் கமல் பேசி இருக்கும் வசனம் தான் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு இந்த வார டெம்பெல்ட்.
4 வருடங்களுக்கு முன்பு கமல் இயக்கி, நடித்திருந்த திரைப்படம் தான் விஸ்வரூபம்.பூஜா குமார், ஆண்ட்ரியா நடித்திருந்த இந்த திரைப்படத்தின் கதை பற்றி ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு கருத்து. சரியாக சொல்ல வேண்டும் என்றால் படத்தை குறைந்தது 4 அல்லது அதற்கு மேல் பார்த்தால் தான் புரியும். இது படத்தை பார்த்த சாமானிய மக்களின் கருத்து.
அதே நேரம், படத்தின் நீளம் காரணமாக முதல் பாகத்தில் அவிழ்க்காத முடிச்சுக்களை எல்லாம் விஸ்வரூபம் 2 படத்தில் அவிழ்க்க இருப்பதாக கமல் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இதற்கான ஷூட்டிங் எல்லாம் முடித்து தற்போது படம் வெளிவர தயாராகி விட்டது. வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி நாடு முழுவதும் விஸ்வரூபம் 2 வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தான், நேற்றைய தினம் விஸ்வரூபம் 2 படத்தின் ட்ரெய்லரை கமலின் மகளும், நடிகையுமான ஸ்ருதிஷாசன் வெளியிட்டார். இணையத்தில் இந்த ட்ரெய்லர் ஹிட் அடித்த போதிலும் நெட்டிசன்களின் கையில் விஸ்வரூபம் 2 ட்ரெய்லர் மீம்ஸ் மற்றும் ட்ரோல் வீடியோவாக உருமாறியுள்ளது. குறிப்பாக தேச துரோகிகள் குறித்து படத்தில் கமல் பேசி இருக்கும் வசனம் தான் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு இந்த வார டெம்பெல்ட்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.