/indian-express-tamil/media/media_files/58nffdXJj9zY2X1zlyWA.jpg)
கோவை: வடவள்ளி பொம்மனாம்பாளையம் குடியிருப்பு பகுதியில் குட்டியுடன் காட்டு யானைகள் உலா வந்த வீடியோ காட்சி.
Elephant | coimbatore: கோவை மருதமலை, நரசிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்பு அருகே கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் உலா வருகிறது. இந்நிலையில், மருதமலை அருகே உள்ள வடவள்ளி பொம்மனாம்பாளையம் டான்சா நகர் சி பிளாக் பகுதியில் திடீரென குட்டியுடன் 4 காட்டு யானைகள் புகுந்தது. இதனை கண்ட அக்குடியிருப்பைச் சேர்ந்த மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த கோவை சரக வனத்துறை ஊழியர்கள் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.
நீண்ட நேரம் போராடி குட்டியுடன் உலா வந்த யானைகளை வனத்துறையினர் மருதமலை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். ஆனால் வனப்பகுதிக்குள் சென்ற யானைகள் மீண்டும் பாரதியார் பல்கலைகழகம் அருகே வெளியே காட்டு யானைகள் வந்ததால், அங்கு விரைந்த வனத்துறையினர் பட்டாசுகளை வீசி யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
இந்நிலையில், வடவள்ளி பொம்மனாம்பாளையம் குடியிருப்பு பகுதியில் குட்டியுடன் காட்டு யானைகள் உலா வந்த காட்சிகளை குடியிருப்பு மக்கள் செல்போனில் பதிவு செய்தனர். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கோவை வடவள்ளி பொம்மனாம்பாளையம் அருகே திடீரென குடியிருப்பில் குட்டியுடன் புகுந்த 4 காட்டு யானைகள்!https://t.co/gkgoZMHWlc | #coimbatore | #elephant | 📹 @rahman14331pic.twitter.com/tFvgY1pPKW
— Indian Express Tamil (@IeTamil) January 2, 2024
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.