மேற்கு வங்கத்தில் காட்டு யானையின் வாலைப் பிடித்து இழுத்து துன்புறுத்திய நபர்; இணையத்தில் கடும் கொந்தளிப்பு: வைரல் வீடியோ

காட்டுப் பகுதிக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்திற்குள் நுழைந்த யானைக் கூட்டத்திற்கு ஆபத்தான தூரத்தில் கும்பலாக சில ஆண்கள் இருப்பதை வைரல் வீடியோ காட்டுகிறது.

காட்டுப் பகுதிக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்திற்குள் நுழைந்த யானைக் கூட்டத்திற்கு ஆபத்தான தூரத்தில் கும்பலாக சில ஆண்கள் இருப்பதை வைரல் வீடியோ காட்டுகிறது.

author-image
WebDesk
New Update
Man harasses elephant West Bengal

இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், வனவிலங்குகளைத் துன்புறுத்துவது அல்லது தூண்டிவிடுவது தண்டனைக்குரிய குற்றமாகும். Photograph: (Image source: @streetdogsofbombay/Instagram)

மேற்கு வங்கத்தின் மெதினிபூர் மாவட்டத்தில் விலங்குகளைத் துன்புறுத்தும் ஒரு வருந்தத்தக்க காணொளி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பல நபர்கள், குறிப்பாக ஒருவன், காட்டு யானையின் வாலை இழுப்பதன் மூலமும், கூட்டத்தை நோக்கி கற்களை எறிவதன் மூலமும் யானைக் கூட்டத்தைத் தூண்டிவிடுவதும் துன்புறுத்துவதும் காணப்பட்டது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க:

தற்போது வைரலாகி வரும் காணொளியில், காட்டுப் பகுதிக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்திற்குள் நுழைந்த யானைக் கூட்டத்திற்கு ஆபத்தான தூரத்தில் ஒரு குழு ஆண்கள் உள்ளனர். ஒரு பொறுப்பற்ற செயலாக, ஒருவன் யானையின் பின்னால் பதுங்கிச் சென்று அதன் வாலை இழுக்கிறான். அதிர்ச்சியடைந்த யானை விலகிச் செல்ல, அந்த மனிதன் சிரித்துக்கொண்டே ஓடுகிறான். அந்தக் காணொளியில், சிலர் கூட்டத்தின் மீது கற்களை எறிந்து, காட்டு விலங்குகளை மேலும் ஆத்திரப்படுத்துவதையும் காணலாம்.

வீடியோவைப் பாருங்கள்:

இந்தக் வீடியோவைப் பகிர்ந்துகொண்ட @streetdogsofbombay என்ற இன்ஸ்டாகிராம் பக்கம், “மனிதர்களின் கும்பல் ஒன்று வேடிக்கைக்காக யானையின் வாலை இழுத்து, அதன் மீது கற்களை எறிகிறது! ஆம், அங்கே இருப்பது இரண்டு யானைகள்தான், இந்த குழப்பத்திற்கு முழுவதுமாக மனிதர்கள்தான் காரணம். சொல்லுங்கள் — இங்கே உண்மையில் காட்டுமிராண்டித்தனம் செய்வது யார்? கம்பீரமான அந்தப் பெரிய விலங்குகளா... அல்லது விலங்குகளைப் போல நடந்து கொள்ளும் மனிதர்களா?” என்று எழுதியுள்ளது.

Advertisment
Advertisements

இந்தியாவின் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், வனவிலங்குகளைத் துன்புறுத்துவது அல்லது தூண்டிவிடுவது தண்டனைக்குரிய குற்றமாகும். இந்தக் காணொளியானது சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற பரவலான கோரிக்கையைத் தூண்டியுள்ளது. பல சமூக ஊடகப் பயனர்கள் அந்த நபருக்கு கடுமையான தண்டனை வழங்கக் கோரியுள்ளனர். “அந்த நபரை மிதித்துத் தள்ளாமல் அல்லது மேலே தூக்கி எறியாமல் இருந்ததது பாருங்கள், அந்த யானை மிகவும் மென்மையானது, நாகரிகமானது, கனிவானது” என்று ஒரு இன்ஸ்டாகிராம் பயனர் கருத்து தெரிவித்துள்ளார்.

“இப்படிப்பட்ட பிற்போக்கான மனிதர்கள்... கல்வி மிகவும் முக்கியம், ஆனால் படிக்காத மனிதர்களும் விலங்குகளிடம் கனிவுடன் இருக்கிறார்கள். இதைப் பார்ப்பது உண்மையில் மிகவும் வருத்தமாக இருக்கிறது... இந்தியாவில் விலங்குகளுக்கான சட்டம் கேவலமாக உள்ளது... அதனால்தான் இவை அனைத்தும் தினமும் எல்லா இடங்களிலும் நடக்கின்றன,” என்று மூன்றாவது பயனர் கருத்து தெரிவித்துள்ளார். 

“அற்பமானவர்கள், இதைப் பார்த்த பிறகு எனக்கு அருவருப்பாக இருக்கிறது. இவர்கள் மனிதர்கள் என்று சொல்ல வெட்கப்படுகிறேன்” என்று நான்காவது பயனர் கூறியுள்ளார்.

Viral Video

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: