New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/03/hhvRw5s8dapXAo9WWAra.jpg)
Coimbatore
உணவு தேடி தேசிய நெடுஞ்சாலைகளைக் கடக்கும் மான்கள் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாவதும் அடிக்கடி நிகழ்கிறது.
Coimbatore
கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அருகே பிரபல தனியார் நகைக் கடையில் நேற்று இரவு திடீரென புள்ளிமான் ஒன்று புகுந்தது.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கோவை மாவட்ட வனப்பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வசிக்கின்றன. கோடைகாலத்தில் உணவு மற்றும் தண்ணீர் தேடி யானைகள், மான்கள் உள்ளிட்ட விலங்குகள் ஊருக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது. குறிப்பாக, சிறுமுகை வனப்பகுதியில் இருந்து கௌசிகா நதி வழியாக புள்ளிமான்கள் கணியூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வருகின்றன. இவை விவசாய நிலங்களில் விளைப் பயிர்களை தின்று நதிப்படுகைகளில் உள்ள புதர்களில் தஞ்சம் அடைகின்றன.
இதனால், கௌசிகா மற்றும் நொய்யல் ஆற்றுப் படுகைகளில் மான்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அருகே பிரபல தனியார் நகைக் கடையில் நேற்று இரவு திடீரென புகுந்த புள்ளிமான்#Coimbatore pic.twitter.com/HUdDCzP2Uv
— Indian Express Tamil (@IeTamil) May 3, 2025
உணவு தேடி தேசிய நெடுஞ்சாலைகளைக் கடக்கும் மான்கள் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாவதும் அடிக்கடி நிகழ்கிறது.
இந்நிலையில் கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட சோமனூரில் உள்ள பிரபல தனியார் நகைக் கடையில் நேற்றிரவு திடீரென ஒரு புள்ளி மான் புகுந்தது. இதைப் பார்த்த கடையில் இருந்த ஊழியர்களும் வாடிக்கையாளர்களும் பதறினர்.
சிறிது நேரத்தில் மான் அங்கிருந்து வெளியேறி சாலையில் துள்ளி ஓடி மறைந்தது. இந்தக் காட்சியை வாடிக்கையாளர்கள் செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.