New Update
/indian-express-tamil/media/media_files/2025/07/24/elephant-wild-2025-07-24-13-47-40.jpg)
Coimbatore
காட்டு யானை சிறிது நேரம் சாலையில் சுற்றியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Coimbatore
மேற்கு தொடர்ச்சி மலை, எண்ணற்ற காட்டு யானைகளின் வசிப்பிடமாக விளங்குகிறது. இந்த கம்பீரமான உயிரினங்கள் இரவு நேரங்களில் காட்டை விட்டு வெளியே வந்து, தடாகம், மருதமலை போன்ற பகுதிகளில் உணவைத் தேடி அலைந்துவிட்டு, காலை வேளைகளில் மீண்டும் வனப்பகுதிக்குள் திரும்புவது வழக்கம்.
இந்நிலையில், கோவை மாவட்டம் கல்வீரம்பாளையம் அருகேயுள்ள பாரதியார் பல்கலைக்கழகம், மருதமலை சாலையில் இன்று ஒரு காட்டு யானை திடீரென சாலையைக் கடந்து சென்றது. பகல் நேரத்தில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் யானை நடமாடியதைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
கோவை மாவட்டம் கல்வீரம்பாளையம் அருகேயுள்ள பாரதியார் பல்கலைக்கழகம், மருதமலை சாலையில் இன்று திடீரென சாலையைக் கடந்து சென்ற ஒரு காட்டு யானை. பகல் நேரத்தில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் யானை நடமாடியதைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்....#Coimbatore pic.twitter.com/NLtZARbfhR
— Indian Express Tamil (@IeTamil) July 24, 2025
இதையடுத்து, தகவலறிந்த வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், யானையை பத்திரமாக வனப்பகுதிக்குள் விரட்டினர். காட்டு யானை சிறிது நேரம் சாலையில் சுற்றியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.