கோவையில் பட்டப் பகலில் சாலையைக் கடந்து சென்ற காட்டு யானை: பொதுமக்கள் அதிர்ச்சி

காட்டு யானை சிறிது நேரம் சாலையில் சுற்றியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

காட்டு யானை சிறிது நேரம் சாலையில் சுற்றியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Elephant wild

Coimbatore

மேற்கு தொடர்ச்சி மலை, எண்ணற்ற காட்டு யானைகளின் வசிப்பிடமாக விளங்குகிறது. இந்த கம்பீரமான உயிரினங்கள் இரவு நேரங்களில் காட்டை விட்டு வெளியே வந்து, தடாகம், மருதமலை போன்ற பகுதிகளில் உணவைத் தேடி அலைந்துவிட்டு, காலை வேளைகளில் மீண்டும் வனப்பகுதிக்குள் திரும்புவது வழக்கம்.
 
இந்நிலையில், கோவை மாவட்டம் கல்வீரம்பாளையம் அருகேயுள்ள பாரதியார் பல்கலைக்கழகம், மருதமலை சாலையில் இன்று ஒரு காட்டு யானை திடீரென சாலையைக் கடந்து சென்றது. பகல் நேரத்தில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் யானை நடமாடியதைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

Advertisment

இதையடுத்து, தகவலறிந்த வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், யானையை பத்திரமாக வனப்பகுதிக்குள் விரட்டினர். காட்டு யானை சிறிது நேரம் சாலையில் சுற்றியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: