/tamil-ie/media/media_files/uploads/2023/07/theyilsai.jpg)
அச்சத்தில் ஓட்டம் பிடித்த தொழிலாளர்கள்
வால்பாறை அடுத்த குரங்கு முடி எஸ்டேட் பகுதியில் ஒற்றைக்காட்டு யானையால் தேயிலை பறிக்கும் பணி பாதிப்பு அச்சத்தில் ஓட்டம் பிடித்த தொழிலாளர்கள்.
வால்பாறை அடுத்த குரங்கு முடி எஸ்டேட் பகுதியில் தேயிலைத் தோட்டத்திற்கு உலா வந்த ஒற்றைக் காட்டு யானையால் தேயிலைத் தொழிலாளர்கள் பணியில் இருந்து பதறி அடித்து ஓட்டம் பிடித்தனர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது
ஆனைமலை புலிகள் காப்பக மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட குரங்குமுடி. சிவாகாபி. முருகன். எஸ்டேட் உள்ளிட்ட பகுதிகளில் இந்த ஒற்றைக் காட்டு யானை ஆனது உலா வருகிறது.
அப்பகுதியில் பலா மரங்கள் அதிக அளவில் இருப்பதால் பலாப்பழங்களை உண்பதற்காகவே தேயிலை தோட்டத்திற்குள் முகாமிட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பணியில் ஈடுபடும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை விரட்ட முற்படுகிறது.
இதனால் தொழிலாளர்கள் அச்சத்தில் அப்பகுதியில் இருந்து உயிரைப் பாதுகாத்துக் கொள்ள ஓட்டம் பிடிக்கின்றனர் எனவே வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டியிருக்கும் ஒற்றைக் காட்டுயானை யை அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறைக்கு கோரிக்கை வைக்கின்றனர்.
பி.ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.