கோவையில் குடிநீர் கம்பெனிக்குள் புகுந்த காட்டு யானை : அலறி அடித்து சத்தம் போட்ட தொழிலாளர்கள் வைரல் வீடியோ

கோவையில் காட்டு யானை ஒன்று குடிநீர், உணவு தேடி குடிநீர் கம்பெணிக்குள் புகுந்ததைப் பார்த்த தொழிலாளர்கள் அலறியடித்து சத்தம்போட்டு யானையை விரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவையில் காட்டு யானை ஒன்று குடிநீர், உணவு தேடி குடிநீர் கம்பெணிக்குள் புகுந்ததைப் பார்த்த தொழிலாளர்கள் அலறியடித்து சத்தம்போட்டு யானையை விரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
elep comp x

கோவையில் காட்டு யானை ஒன்று குடிநீர், உணவு தேடி குடிநீர் கம்பெணிக்குள் புகுந்ததைப் பார்த்த தொழிலாளர்கள் அலறியடித்து சத்தம்போட்டு யானையை விரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட கடும் வறட்சியின் காரணமாக அங்கு இருந்து உணவு, குடிநீர் தேடி அருகே உள்ள தொண்டாமுத்தூர் சுற்று வட்டார  பகுதிகளில் புகுந்த யானை கூட்டம், வனப் பகுதியில் பருவ மழை பொழிந்து வறட்சி நிலை மாறிய பிறகும் இங்கேயே முகாமிட்டு உள்ளது. 

Advertisment

மேலும் அவ்வப் போது அருகே உள்ள கிராமப் பகுதிகளுக்குள் புகுந்து வீடுகளை சேதப்படுத்தி அங்கு வைத்து இருக்கும் அரிசி, பருப்பு போன்ற உணவுப் பொருள்களையும், அதேபோன்று தோட்டங்களுக்குள் புகுந்து அங்கு இருக்கும் வீடுகளில் கால்நடைகளுக்கு வைத்து இருக்கும் தீவனங்கள் மற்றும் விலை நிலங்களுக்குள் புகுந்து பயிரிடப்பட்ட பயிர்களை சூறையாடி தின்று சேதத்தை ஏற்படுத்தி செல்கிறது. 

இதனை தடுக்க வனத் துறையினர் பல்வேறு குழுக்கள் அமைத்து கண்காணித்து கிராமப் பகுதிகளுக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தும் யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டையும், வருகின்றனர். 

Advertisment
Advertisements

பின்னர் மீண்டும் அதே பகுதிகளுக்குள் நுழைந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனை தடுக்கச் செல்லும் போது யானை - மனித மோதல் ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்படுகிறது. 

இந்நிலையில் சிறுவாணி அடிவாரப் பகுதியான மத்வராயபுரம் ஊராட்சி, நல்லூர்வயல் பகுதியில் உள்ள சபோல் மினரல் வாட்டர் கம்பனிக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை. நிறுவனத்திற்குள் நேற்று இரவு செல்ல முயன்ற போது, அதை பார்த்து அங்கு இருந்த ஊழியர்கள் அலறி அடித்து சத்தம் போட்டதால் அங்கு இருந்த உடனடியாக திரும்பிச் சென்றது. இதனை அங்கு இருந்து ஊழியர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து உள்ளார். அந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் இந்தக் ஒற்றைக் காட்டு யானை கடந்த 2 வருடங்களாக நல்லூர் வயல் பகுதியில் பல சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. 

மேலும் ஏதேனும் உயிர் சேதம் ஏற்படும் முன்பு தமிழக அரசும், வனத் துறையினரும் உரிய நடவடிக்கை எடுத்து நிரந்தரமாக யானையை வனப்ப குதிக்குள் அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Video

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: