பூண்டி ஆண்டவர் கோயில் வளாகத்தில் நள்ளிரவில் புகுந்த காட்டு யானை - பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்: வைரல் வீடியோ

கோவை, வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பூண்டி ஆண்டவர் கோவில் வளாகத்தில் நள்ளிரவு ஒற்றை காட்டு யானை புகுந்து தடுப்புகளைத் தள்ளி பிளிறியதால் பரபரப்பு நிலவியது.

கோவை, வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பூண்டி ஆண்டவர் கோவில் வளாகத்தில் நள்ளிரவு ஒற்றை காட்டு யானை புகுந்து தடுப்புகளைத் தள்ளி பிளிறியதால் பரபரப்பு நிலவியது.

author-image
WebDesk
New Update
elephant

திடீரென யானையின் பிளிறல் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் மற்றும் கடைக்காரர்கள் உயிர் பயத்தில் அங்கு இருந்து அலறியடித்து ஓடினர்.

கோவை, வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பூண்டி ஆண்டவர் கோவில் வளாகத்தில்  நள்ளிரவு ஒற்றை காட்டு யானை புகுந்து தடுப்புகளைத் தள்ளி பிளிறியதால் பரபரப்பு நிலவியது.

Advertisment

கோவை வெள்ளியங்கிரி ஏழாவது மலையில் உள்ள சுயம்புவாக தோன்றிய லிங்கம், சிவன் கோவிலுக்கு செல்வதற்கு வனத்துறையினர் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மே நான்கு மாதங்கள் பக்தர்களுக்கு அனுமதி அளிப்பார்கள். இந்தாண்டும் கடந்த பிப்ரவரி மாதம் முதல் பக்தர்களுக்கு மலையேற வனத் துறையினர் அனுமதி அளித்து உள்ளனர். இதற்காக கடந்த பிப்ரவரி முதல் தமிழக மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல ஆயிரக் கணக்கான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 

கடந்த சில மாதங்களாக வெள்ளியங்கிரி அடிவாரப் பகுதியில் உள்ள பூண்டி ஆண்டவர் கோயில் சன்னிதி வளாகத்தில், மலையேறும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் உலா வரும் காட்டு யானை அங்குள்ள கடைகள் மற்றும் அன்னதான கூடங்களுக்கு சென்று அங்கு வைத்து இருக்கும் உணவுப் பொருட்களை தின்று சேதப்படுத்திச் செல்வது வாடிக்கையாகிவிட்டது.

Advertisment
Advertisements

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நள்ளிரவு நேரத்தில் கோவில் வளாகத்திற்குள் புகுந்த அந்த யானை, அங்கும், இங்குமாக கடைகள் வழியாக நடந்து சென்றது. அப்போது அங்கு இருந்த காவல் துறையினர் வைத்து இருந்த இரும்பு தடுப்பு தள்ளிவிட்டு கடைகளில் வைக்கப்பட்டு இருந்த பொருட்களை தூக்கி வீசியும், மிதித்தும் சேதப்படுத்தியது.

திடீரென யானையின் பிளிறல் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் மற்றும் கடைக்காரர்கள் உயிர் பயத்தில் அங்கு இருந்து அலறியடித்து ஓடினர். தொடர்ந்து அந்த காட்டு யானை கோவில் வளாகத்திலேயே நீண்ட நேரம் உலா வந்தது. இதை அடுத்து, அதிர்ச்சி அடைந்த அப்பகுதியில் கடைக்காரர்கள் மற்றும் பக்தர்கள் உடனடியாக வனத் துறையினருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த வனத் துறையினர் வெகுநேரம் போராடி அந்த யானையை பத்திரமாக வனப்பகுதிக்குள் விரட்டினர். இந்த சம்பவத்தால் பூண்டி ஆண்டவர் கோவில் வளாகத்தில் சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை நிலவியது.

Viral Video

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: