Advertisment

மாட்டு கொட்டகையில் புகுந்த ஒற்றை காட்டு யானை; புண்ணாக்கு மூட்டையை தூக்கி சென்ற யானை வீடியோ

மாட்டு கொட்டகையில் உணவுத்தேடி புகுந்த ஒற்றை காட்டுயானை, பட்டாசு வெடித்தும் கண்டுகொள்ளாமல் புண்ணாக்கு முட்டை தூக்கிச்சென்ற யானையின் வீடியோ வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
A elephant x

பட்டாசு வெடித்தும் கண்டுகொள்ளாமல் புண்ணாக்கு முட்டை தூக்கிச்சென்ற யானை

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மாட்டு கொட்டகையில் உணவுத்தேடி புகுந்த ஒற்றை காட்டுயானை, பட்டாசு வெடித்தும் கண்டுகொள்ளாமல் புண்ணாக்கு முட்டை தூக்கிச்சென்ற யானையின் வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisment

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்சி மலையை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதால் வனத்துறையினர் வாகனங்கள் மூலம் வனப்பகுதிக்குள் உள்ள தண்ணீர் தொட்டிகளில் நீர் நிரப்பி வருகின்றனர்.

எனினும் உணவு பற்றாக்குறை உள்ளதால் யானை உள்ளிட்ட வன விலங்குகள் குடியிருப்புகளை நோக்கி வருவது தொடர்கிறது குறிப்பாக மதுக்கரை,போளுவாம்பட்டி, தடாகம்,மருதமலை வனப் பகுதிகளில் உள்ள யானைகள் இரவு நேரங்களில் தோட்டங்களில் புகுந்து வருகிறது.

மேலும் விவசாய பயிர்களை சேதப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் வீடுகளை உடைத்து  உள்ள இருக்கும் அரிசி, மாட்டு தீவனங்களை சாப்பிட்டு வருகிறது. இந்நிலையில் போலுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட காருண்யா அருகே உள்ள சப்பானிமடை பகுதியில் நேற்று இரவு ஒற்றை யானை புகுந்தது அங்கிருந்த புண்ணாக்கு மூட்டைகளை சாப்பிட எடுத்து சென்றது. 

வனத்துறையினர் பட்டாசு வெடித்து வெளியே அனுப்ப முயற்சித்தும் யானை அசரவில்லை பின்னர் வனத்துறையினர் யானை அதிகாலை அடர் வனப்பகுதிக்கு விரட்டி விட்டனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Video
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment