New Update
/indian-express-tamil/media/media_files/2025/07/29/wild-elephant-flash-flood-2025-07-29-12-37-48.jpg)
Valparai
யானை தன் முழு பலத்தையும் பயன்படுத்தி, வெள்ளத்தின் சீற்றத்திற்கு ஈடுகொடுத்து, சிறிது சிறிதாக முன்னேறி, இறுதியாக பத்திரமாக கரை சேர்ந்த காட்சி அங்கிருந்தவர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
Valparai
வால்பாறையை அடுத்த கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அதிரப்பள்ளி ஆறு, தற்போது பெய்துவரும் கனமழையின் காரணமாக வரலாறு காணாத வகையில் சீறிப் பாய்ந்து கொண்டிருக்கிறது.
இதனிடையே, அதிரப்பள்ளி ஆற்றில் எதிர்பாராதவிதமாக இறங்கி ஆற்றைக் கடக்க முயன்ற ஒரு காட்டுயானை, அதன் பலத்தை மீறிய வெள்ள நீரில் சிக்கித் தத்தளித்தது. ஆர்ப்பரித்து ஓடிய ஆற்று நீர் யானையை மூழ்கடித்தும், அடித்துச் சென்றும் பெரும் போராட்டத்தை ஏற்படுத்தியது. யானை தன் முழு பலத்தையும் பயன்படுத்தி, வெள்ளத்தின் சீற்றத்திற்கு ஈடுகொடுத்து, சிறிது சிறிதாக முன்னேறி, இறுதியாக பத்திரமாக கரை சேர்ந்த காட்சி அங்கிருந்தவர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
வால்பாறை அருகேயுள்ள அதிரப்பள்ளி ஆற்றில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கித் தவித்த காட்டுயானை ஒன்று, பெரும் போராட்டத்திற்குப் பிறகு பத்திரமாகக் கரை சேர்ந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது...#coimbatore pic.twitter.com/wiEvmygEH6
— Indian Express Tamil (@IeTamil) July 29, 2025
இந்த திக் திக் காட்சியை அப்பகுதியில் இருந்த சிலர் தங்களின் செல்போனில் படம் பிடித்துள்ளனர். தற்போது இந்த வீடியோ காட்சிகள் வலைதளங்களில் தீயாய் பரவி வருகின்றன. யானையின் துணிச்சலையும், உயிர் பிழைக்க அது மேற்கொண்ட கடும் போராட்டத்தையும் பலரும் வியந்து பாராட்டி வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.