New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/02/Iih135Z5z3kwUIIss8tq.jpg)
Mettupalayam wild elephant
நிலையில் மலைப்பாதையில் சுற்றி திரியும் ஒற்றைக் காட்டு யானையை வனத்துறையினர் கண்காணித்து அடர்ந்தவனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் .
Mettupalayam wild elephant
மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி செல்லும் மலைப்பாதையில் முகாமிட்ட காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.
மேட்டுப்பாளையம் கோத்தகிரி குஞ்சப்பனை சாலையில் நேற்று மாலை காட்டு யானை சுற்றி வந்தது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஒட்டிகள் பாதியிலேயே வாகனத்தை நிறுத்திவிட்டு அச்சத்தில் நின்றனர்.
கோத்தகிரி செல்லும் மலைப்பாதையில் முகாமிட்ட காட்டு யானை: ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்ற வாகனங்கள்… தும்பிக்கையால் காரை இடிக்கும் வீடியோ#Coimbatore pic.twitter.com/o5btdEjmkd
— Indian Express Tamil (@IeTamil) May 2, 2025
ஒரு மணி நேரத்திற்கு மேலாக முகாமிட்ட காட்டு யானையால் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரியில் செல்லும் வாகனங்களும் கோத்தகிரி இருந்து மேட்டுப்பாளையத்தில் சென்ற வாகனங்கள், ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்றன .
தற்போது இந்த காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில் மலைப்பாதையில் சுற்றி திரியும் ஒற்றைக் காட்டு யானையை வனத்துறையினர் கண்காணித்து அடர்ந்தவனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் .
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.