Advertisment

தடாகம் அருகே அதிகாலையில் பொதுமக்கள் எழுப்பிய சத்தம்; தலை தெறிக்க ஓடிய ஒற்றை காட்டு யானை வைரல் வீடியோ

தடாகம் அருகே 22 நஞ்சுண்டாபுரத்தில் உணவு தேடி ஊருக்குள் வந்த ஒற்றைக் காட்டு யானை இரவில் அப்பகுதியில் சுற்றி திரிந்து உள்ளது. அதிகாலையில் அப்பகுதி பொதுமக்கள் அந்த யானையை கண்டதும், சத்தம் எழுப்பி விரட்டி உள்ளனர்.

author-image
WebDesk
New Update
Elephant running 1

அதிகாலையில் அப்பகுதி பொதுமக்கள் அந்த யானையை கண்டதும், சத்தம் எழுப்பி விரட்டி உள்ளனர்.

கோவை மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள கிராமங்களில் கடந்த சில மாதங்களாக மலையில் ஏற்பட்ட வறட்சியின் காரணமாக வனப் பகுதியில் இருந்து வந்த காட்டு யானைகளின் கூட்டம். மேற்கு தொடர்ச்சி மலையை சுற்றி உள்ள கிராமப் பகுதிகளில் முகாமிட்டு உணவு தேடி அலைந்து திரிந்து உலா வந்து கொண்டு உள்ளது. 

Advertisment

இதனால் அப்பகுதி பொதுமக்கள் சாதாரணமாக வெளியே செல்வதற்கு கூட அச்சமடைந்து உள்ளனர். வனத் துறையினரும் குழுக்கள் அமைத்து அப்பகுதிகளுக்குள் வரும் காட்டு யானைகளை அவ்வப்போது வனப்பகுதிகளுக்குள் விரட்டியும் வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தடாகம் அருகே 22 நஞ்சுண்டாபுரத்தில் உணவு தேடி ஊருக்குள் வந்த ஒற்றைக் காட்டு யானை இரவில் அப்பகுதியில் சுற்றி திரிந்து உள்ளது. அதிகாலையில் அப்பகுதி பொதுமக்கள் அந்த யானையை கண்டதும், சத்தம் எழுப்பி விரட்டி உள்ளனர். 

Advertisment
Advertisement

அந்த சத்தத்தை கேட்டு அந்த ஒற்றைக் காட்டு யானை அப்பகுதியில் உள்ள தெருக்களில் தலை தெரிக்க ஓடியது. அதனை அங்கு குடியிருந்த ஒருவர் மொட்டை மாடியில் இருந்து எடுத்த செல்போன் வீடியோ காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Viral Video
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment