New Update
/indian-express-tamil/media/media_files/2025/02/09/jzb9A3Arn5cCkINDfbKm.jpg)
யானை வனப் பகுதியை நோக்கி தலை தெறிக்க ஓடிய வீடியோ
கோவை காருண்யா பல்கலைக்கழக வேளாண்துறை மாணவர்கள் பயிரிட்டுள்ள தோட்டத்துக்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானையை விரட்டும்போது, அந்த யானை வனப் பகுதியை நோக்கி தலை தெறிக்க ஓடிய வீடியோ வைரலாகி வருகிறது.
யானை வனப் பகுதியை நோக்கி தலை தெறிக்க ஓடிய வீடியோ
கோவை காருண்யா பல்கலைக்கழக வேளாண்துறை மாணவர்கள் பயிரிட்டுள்ள தோட்டத்துக்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானையை விரட்டும்போது, அந்த யானை வனப் பகுதியை நோக்கி தலை தெறிக்க ஓடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை ஆலாந்துறை அடுத்த காருண்யா பல்கலைக் கழகம் உள்ளது. இங்கு பல்வேறு துறைகளை சேர்ந்த ஆயிரக் கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
அந்த கல்லூரியில் வேளாண்துறை பயிலும் மாணவர்கள் கல்லூரி பின்புறம் உள்ள வேளாண் தோட்டத்தில் பல்வேறு பயிர்களை பயிரிட்டு பயின்று வருகின்றனர்.
கோவை காருண்யா பல்கலைக்கழக வேளாண்துறை மாணவர்கள் பயிரிட்ட தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானை; விரட்டும்போது தலைதெறிக்க ஓட்டம்: வீடியோ#viralvideo pic.twitter.com/88MAfpjGt8
— Indian Express Tamil (@IeTamil) February 9, 2025
இந்நிலையில் அங்கு வேளாண் தோட்டத்திற்கு புகுந்த ஒற்றைக் காட்டி அணை அங்கு பயிரிடப்பட்ட பயிர்களை சேதப்படுத்தி உள்ளது. இது குறித்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு சென்ற வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்கு விரட்டினர்.
அப்பொழுது அந்த யானை அங்கிருந்து வனப்பகுதியை நோக்கி ஓடியது. அதனை அங்கு இருந்த மாணவர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து உள்ளார் அந்த காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.