உணவு தேடி தோட்டத்து வீட்டின் கதவு ஓரத்தில் நின்று எட்டிப் பார்த்த வேட்டையன் காட்டு யானை - சி.சி.டி.வி வீடியோ வைரல்

கோவை சுற்றுவட்டார கிராமப் பகுதியில் கடந்த சில மாதங்களாக உணவு தேடி ஊருக்குள் காட்டு யானைகள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.

கோவை சுற்றுவட்டார கிராமப் பகுதியில் கடந்த சில மாதங்களாக உணவு தேடி ஊருக்குள் காட்டு யானைகள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.

author-image
WebDesk
New Update
wild elephant x

வரப்பாளையம் விவசாயி ராமசாமி என்பவர் தோட்டத்திற்கு புகுந்த ஒற்றைக் காட்டு யானை வேட்டையன்.

கோவை சுற்றுவட்டார கிராமப் பகுதியில் கடந்த சில மாதங்களாக உணவு தேடி ஊருக்குள் காட்டு யானைகள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. பெரியநாயக்கன்பாளையம், பன்னிமடை, தடாகம் போன்ற பகுதிகளில் சுற்றித் திரிந்த ஒற்றைக் காட்டு யானை வேட்டையன். கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு தோட்டத்து கேட்டை மூடச் சென்ற விவசாயி வேலுமணி என்பவரை தாக்கிக் கொன்றது, அதைத் தொடர்ந்து தாளியூர் பகுதியைச் சேர்ந்த நடராஜன் என்பவர் நடை பயிற்சிக்கு சென்ற போது யானை தாக்கி உயிரிழந்தார். 

Advertisment

ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் வனத்துறை அதிகாரிகள் மற்றும் தாசில்தார் சம்பவ இடத்திற்கு சென்று யானையை வேட்டையனை பிடித்து வேற வனப் பகுதிக்கு மாற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து இருந்தனர்.

இதைத் தொடர்ந்து, பொள்ளாச்சி டாப்ஸ்லிப் யானைகள் முகாமில் இருந்து முத்து மற்றும் சுயம்பு என்ற இரண்டு கும்கி யானைகள் கொண்டு வரப்பட்டு, கோவை வரபாளையம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு  இருந்தனர். 

இரண்டு கும்கி யானைகளுக்கும் மதம் பிடித்ததால் அதனை மீண்டும் டாப்ஸ்லிப்பில் உள்ள யானைகள் முகாமிற்கு கொண்டு சென்றனர். 

Advertisment
Advertisements

இதைத்தொடர்ந்து, கோவை, தடாகம் பகுதியில் பிறந்து வளர்ந்த காட்டு யானை சின்னத்தம்பி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விளை நிலங்களுக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வந்த அந்த காட்டு யானைக்கு  பயிற்சி அளித்து தற்பொழுது கும்கியாக மாற்றி உள்ளனர் வனத் துறையினர்.  

கடந்த சில மாதங்களுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டத்தில் அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்த காட்டு யானையை விரட்ட இந்த கும்கி யானை சின்னத்தம்பி அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு அதனை விரட்டி வந்தது.

கோவை தடாகம் பகுதியில் இரண்டு உயிர்களை கொன்ற வேட்டையன் என்ற காட்டு யானையை கண்காணித்து வனப் பகுதிக்குள் விரட்ட வரப்பாளையம் பகுதியில் வனத் துறையினர் நிறுத்தி உள்ளனர். மேலும், காலை, மாலை என காட்டு யானைகளை கண்காணிக்க அப்பகுதியில் ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். இதனால் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் ஊருக்குள் வருவது குறைந்தது.

இந்நிலையில், நேற்று இரவு வரப்பாளையம் விவசாயி ராமசாமி என்பவர் தோட்டத்திற்கு புகுந்த ஒற்றைக் காட்டு யானை வேட்டையன். அங்கு இருந்த வீட்டின் கதவு முன்பு நின்று எட்டிப் பார்த்தது. அது அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரல் ஆகிய வருகிறது.

இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஒற்றை காட்டு யானை வேட்டையன் தாக்கி உயிர் சேதத்தை ஏற்படுத்தி விடும் என அச்சத்தில் உள்ளனர்.

எனவே வனத் துறையினர் உறுதி அளித்தது, போன்று வேட்டையனை பிடித்து வேறு பகுதியில் உள்ள அடர்ந்த வனப் பகுதிக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Viral Video

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: