Advertisment

மேட்டுப்பாளையம்- ஊட்டி பிரதான சாலையை கடக்க முயன்ற பாகுபலி யானை: வாகன ஓட்டிகள் அச்சம்

நேற்றிரவு நெல்லி மலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய பாகுபலி யானை மேட்டுப்பாளையம் ஊட்டி பிரதான சாலையை கடக்க முயன்றது.

author-image
WebDesk
New Update
Coimbatore

Mettupalaiyam

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான ஓடந்துறை,  பாலப்பட்டி, வச்சினம்பாளையம், நெல்லித்துறை, தேக்கம்பட்டி, சமயபுரம் என பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக பாகுபலி என மக்களால் அழைக்கப்படும் ஒற்றைக் காட்டு யானையின் நடமாட்டம் அதிகமாக இருந்து வருகிறது.

Advertisment

தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் உணவுக்காகவும் தண்ணீருக்காகவும் பாகுபலி யானை அடிக்கடி ஊருக்குள் நுழைந்து விடுகிறது. அவ்வாறு நுழையும் யானை ஊருக்குள் நுழைந்து பயிர்களை சேதம் செய்வதோடு மனிதர்களையும் அச்சுறுத்தி வருகிறது.

இந்த நிலையில்  நேற்றிரவு நெல்லி மலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய பாகுபலி யானை மேட்டுப்பாளையம் ஊட்டி பிரதான சாலையை கடக்க முயன்றது.

வாகனப் போக்குவரத்து அதிகமாக இருந்ததன் காரணமாக நீண்ட நேரமாக சாலை ஓரத்திலேயே பாகுபலி யானை முகாமிட்டிருந்தது. இதனால் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

துகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின்னர் மீண்டும் பாகுபலி யானை, நெல்லி மலை வனப்பகுதிக்குள் சென்றது. இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்தனர்.

செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Ooty
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment