Advertisment

கோவை தடாகம் அருகே வீட்டை சேதப்படுத்திய காட்டுயானைகள் - வீடியோ

கோவை தடாகம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் திப்பனூர் பகுதியில் உள்ள வசந்த் என்பவரது இல்லத்தையும் சேதப்படுத்தி சென்றுள்ளன.

author-image
WebDesk
New Update
Wild elephants damage house near Thadagam Coimbatore video Tamil News

வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்து விளை நிலங்களையும் சேதப்படுத்தி செல்கின்றன. 

 Elephant-attack: கோவை மாவட்டத்தில் தடாகம், மாங்கரை, மருதமலை, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் காணப்படுகிறது. அவ்வப்போது வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்து விளை நிலங்களையும் சேதப்படுத்தி செல்கின்றன. 

Advertisment

இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு தடாகம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் திப்பனூர் பகுதியில் உலா வந்துள்ளன. அந்த யானைகள் வசந்த் என்பவரது இல்லத்தையும் சேதப்படுத்தி சென்றுள்ளன. இரவு நேரத்தில் வசந்த மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் இருந்த நிலையில், யானை வருவதை கண்டு படுக்கை அறைக்குள் சென்று தாளிட்டு கொண்டனர். 

அங்கு வந்த யானைகள் ஜன்னலை சேதப்படுத்தி உள்ளது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானைகள் வனப்பகுதிக்குள் விரட்டினர். இப்பகுதியில் அடிக்கடி காட்டுயானைகள் உலா வருவதாலும், சேதங்களை விளைவிப்பதாலும் வனத்துறையினர் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Coimbatore Elephant Attack
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment