ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணித்த பெண்; டிக்கெட் பரிசோதகருக்கு பளார்! வைரல் வீடியோவுக்கு ரயில்வே சேவா பதில்

டிக்கெட் இல்லாமல் பயணித்ததாகக் கூறப்படும் அந்தப் பெண், ரயில்வே ஊழியருக்கு ஒத்துழைக்க மறுத்து, அவர் தவறாக நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டினார். பின்னர், அவர் காவல்துறையினரால் ரயிலிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

டிக்கெட் இல்லாமல் பயணித்ததாகக் கூறப்படும் அந்தப் பெண், ரயில்வே ஊழியருக்கு ஒத்துழைக்க மறுத்து, அவர் தவறாக நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டினார். பின்னர், அவர் காவல்துறையினரால் ரயிலிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

author-image
WebDesk
New Update
ticket viral

ரயிலில் 2-ம் வகுப்பு ஏசி கோச்சில் டிக்கெட் இல்லாமல் பயணித்த பெண், டிக்கெட் பரிசோதகரை அறைந்தார்; வீடியோ வைரலான நிலையில், ரயில்வே சேவா பதிலளித்தது.

ரயிலில் பயணித்த ஒரு பெண் பயணிக்கும், டிக்கெட் பரிசோதகருக்கும் (TTE) இடையே நடந்த வாக்குவாதம் தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க:

இந்த வீடியோவில், டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட அந்தப் பெண், டிக்கெட் பரிசோதகரிடம் சண்டையிடுவது தெரிகிறது. அவர் மீண்டும் மீண்டும் டிக்கெட்டைக் காட்டுமாறு கேட்டபோதும், அந்தப் பெண், “கண்ணு தெரியாதா?” என்று கேட்டு, அவர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டுகிறார்.

அருகில் இருந்த சக பயணிகள் சிலர் ரயில்வே ஊழியருக்கு ஆதரவாக வந்து, அவரிடம் அமைதியாக இருக்குமாறும், ஒத்துழைக்குமாறும் கேட்டுக்கொண்டனர். “பெண்களின் உரிமையை தவறாகப் பயன்படுத்தாதீர்கள், யாரை வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் பேசலாம் என்று நினைக்காதீர்கள்” என்று ஒருவர் கூறுவது கேட்கிறது.

இந்த வாக்குவாதம் இரவு முழுவதும் தொடர்ந்ததாக அந்த வீடியோ காட்சி உணர்த்துகிறது. ஒரு கட்டத்தில், வயதான பயணி ஒருவர் நிலைமையை யாருக்கோ தெரிவிக்க அழைப்பது கேட்கிறது. மறுநாள் காலை, காவல்துறை ரயிலில் ஏறி, அந்தப் பெண், டிக்கெட் பரிசோதகர் மற்றும் சில பயணிகளை ரயிலிலிருந்து வெளியேற்றினர். மற்றொரு பரபரப்பான தருணத்தில், அந்தப் பெண் ரயில்வே ஊழியரைத் தாக்குவது போல தெரிகிறது, அப்போது அவர், “இதைப் பாருங்கள், இவர் என் மீது தாக்குதல் நடத்தினார்” என்று கேமராவைப் பார்த்துச் சொல்கிறார்.

Advertisment
Advertisements

டிக்கெட் பரிசோதகர், “நீங்க டிக்கெட் இல்லாமல் பயணம் செய்கிறீர்கள், ரயில்வே ஊழியரிடம் தவறாக நடந்துகொள்கிறீர்கள். அதற்கான ஆவணங்கள் தயாராக உள்ளன. நீங்கள் சிறைக்குப் போவீர்கள்” என்றும் கூறுகிறார்.

வீடியோவைப் பாருங்கள்:

இந்த வீடியோவை எக்ஸ் தளத்தில் பயனர் மயங்க் பர்மீ என்பவர் பதிவிட்டு, “முதலாவதாக, அவர் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்கிறார். இரண்டாவதாக, இந்த மனப்பான்மையுடன். ஏனென்றால், எதுவும் நடக்காது என்று அவருக்குத் தெரியும். மகளிர் அதிகாரம் என்ற பெயரில் சட்டத்தை தவறாகப் பயன்படுத்துகிறார்கள்! ஏதாவது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று ரயில்வே சேவையை (@RailwaySeva) டேக் செய்து பதிவிட்டுள்ளார்.

இதற்குப் பதிலளித்த ரயில்வே சேவா, “சிரமத்திற்கு வருந்துகிறோம்! இதுபோன்று ரயில்வே பயணிகளுக்கு அனுபவத்தைக் கொடுப்பதற்கு நாங்கள் விரும்புவதில்லை. தயவுசெய்து பி.என்.ஆர்/ யு.டி.எஸ் (PNR/UTS) எண் மற்றும் மொபைல் எண் போன்ற விவரங்களை டிஎம் வழியாகப் பகிருங்கள்” என்று பதிலளித்தது.

இந்த வீடியோ பகிரப்பட்டதிலிருந்து, இணையவாசிகள் மத்தியில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. பலர் இந்த சம்பவத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளனர். ஒரு பயனர், “இது என்ன வகையான உரிமை? ரயில்வே இதுபோன்ற குற்றவாளிகளை கறுப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும், மேலும் அவர்கள் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் மட்டுமே பயணம் செய்யுமாறு கட்டாயப்படுத்த வேண்டும்” என்று எழுதினார்.

மற்றொரு பயனர், “ரயில் பெட்டிகளுக்கு இடையிலான இணைப்பை மூடுவது மற்றும் ஏசி பயணிகளுக்கு, அவர்கள் பெட்டிக்குள் நுழைவதற்கு முன் டிக்கெட் பரிசோதகரால் பரிசோதிக்கப்படும் சுய-சரிபார்ப்பு பயணச் சீட்டை ரயில்வே வழங்க வேண்டும். இதுவே சரியான நேரம்” என்று எழுதினார்.

மூன்றாவது நபர், “ரயில்களில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டின் சட்டம்-ஒழுங்கும் இப்போது மோசமான நிலையில் உள்ளது. நமது அரசியல்வாதிகள் வாக்கு வங்கி அரசியலுக்காக எதையும் செய்வார்கள். அந்த சட்டங்களை இந்த பெண் நிர்வாகத்தின் கண்ணுக்கு முன்பே அப்பட்டமாக தவறாகப் பயன்படுத்துகிறார்” என்று கருத்து தெரிவித்தார்.

Viral Video

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: