மறைந்த தாயின் கடைசி ஆசை.. உருக்கமுடன் நிறைவேற்றிய மகள்!

இங்கிலாந்தில், மறைந்த தாயின் ஆசையை நிறைவேற்ற அவரது மகள் செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் பயணம் செய்ய தாய் விரும்பியதால், அவரது சாம்பலை கண்ணாடி பாட்டிலில் வைத்து கடலில் கொட்டி அனுப்பிவைத்துள்ளார்.

இங்கிலாந்தில், மறைந்த தாயின் ஆசையை நிறைவேற்ற அவரது மகள் செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் பயணம் செய்ய தாய் விரும்பியதால், அவரது சாம்பலை கண்ணாடி பாட்டிலில் வைத்து கடலில் கொட்டி அனுப்பிவைத்துள்ளார்.

author-image
WebDesk
New Update
-late-mother-travel-wish

மறைந்த தாயின் ஆசை... நிறைவேற்ற மகள் செய்த நெகிழ்ச்சி செயல்!

இங்கிலாந்தில், மறைந்த தாயின் ஆசையை நிறைவேற்ற அவரது மகள் செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் பயணம் செய்ய தாய் விரும்பியதால், அவரது சாம்பலை கண்ணாடி பாட்டிலில் வைத்து கடலில் கொட்டி அனுப்பிவைத்துள்ளார்.

Advertisment

அம்மா என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. ஆறறிவு மனிதர்கள் தொடங்கி உயிரினங்கள் வரை இந்த உலகமே அம்மா என்ற உறவுக்கு கீழ் தான் என கூறப்படுகிறது. அம்மாவை நாம் இருக்கும்போது நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது மனிதர்களின் அர்த்தமுள்ள கருத்தாகும். குடும்ப நலனுக்காக உழைக்கும் அம்மா, தன்னலம் பாராது குடும்பத்தின் மகிழ்ச்சியையே தன்னுடைய சந்தோஷமாக எடுத்துக் கொள்பவளாக திகழ்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். அப்படி ஒரு நெகிழ்ச்சி நிறைந்த சம்பவம் இங்கிலாந்தில் நடந்துள்ளது.

இங்கிலாந்து நாட்டின் ஓல்ட்ஹாமைச் சேர்ந்தவர் காரா மெலியா (Cara Melia). 24 வயதான இவரின் தாய் வெண்டி சாட்விக் தற்போது உயிருடன் இல்லை. மறைந்த தனது தாய் சாட்விக் பயணம் செய்வதை விருப்பமாக கொண்டிருந்ததை அறிந்த காரா, அவரது சாம்பலை ஒரு கண்ணாடி பாட்டிலில் வைத்து, ஒரு பேப்பரில் “இது என்னுடைய அம்மா. அவளை மீண்டும் கடலில் தூக்கி எறியுங்கள், அவள் உலகம் முழுவதும் பயணம் செய்கிறாள்” என்ற நெகிழ வைக்கும் வார்த்தைகளையும் எழுதியுள்ளார்.

Viral News: மறைந்த தாயின் ஆசை.. நிறைவேற்ற மகள் செய்த நெகிழ்ச்சி செயல்!

Advertisment
Advertisements

இதுதொடர்பாக என்.டி.டி.வி வெளியிட்டுள்ள செய்தியில், காரா கடற்கரையில் நின்றுக்கொண்டு கடலுக்குள் தூரமாக பாட்டிலை விட்டுள்ளார். அவரது மறைந்த தாய் வெண்டி சாட்விக் 5 குழந்தைகளின் தாயாவார். 51 வயதில் இதய நோயால் காலமானதாக கூறப்படுகிறது. காரா எறிந்த 12 மணி நேரத்திற்குப் பிறகு, அந்த பாட்டில் மீண்டும் கரைக்குத் திரும்பியுள்ளது. அதை கடற்கரைக்கு ஒரு குடும்பத்தினர் கண்டனர். அதனுள் ஏதோ பேப்பர் இருப்பதைக் கண்டு யாரும் ஆபத்தில் சிக்கிக் கொண்டார்களா என பிரித்த படித்தபோதுதான் உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அவர்கள் இந்த நெகிழ்ச்சியான செய்தியை முகநூலில் பகிர்ந்துள்ளனர்.

கெல்லி ஷெரிடன் என்ற பெண்தான் இதனை செய்துள்ளார். அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், “ஓல்ட்ஹாமில் இருந்து காராவைக் கண்டுபிடிக்கும் நம்பிக்கையில் இதை அனைவரும் பரவலாகப் பகிர முடியுமா? என கேட்டு, “இன்று அதிகாலையில் பட்லின்ஸ், ஸ்கெக்னஸ் கடற்கரையில் இந்த அழகான பெண்ணைக் கண்டோம். அவள் கேட்டபடி அம்மா மீண்டும் கடலில் சேர்க்கப்பட்டாள். காரா அம்மாவுக்கு மகிழ்ச்சியான பயணங்கள் அமைய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். இந்த பதிவிற்கு காரா மீண்டும் பதிலளித்தார். இந்த பதிவானது சமூக வலைத்தளங்களில் வைரலானது. பலரும் காரா மெலியாவுக்கு தங்கள் ஆறுதல்களையும், அவரின் முயற்சிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Viral

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: