/indian-express-tamil/media/media_files/2025/06/06/ZXMTp4ugLwMyxi7UfEwG.jpg)
இந்த மகிழ்ச்சியைக் கிழித்தெறிந்தது ஒரு மரண நெரிசல். புதன்கிழமை மாலை, ஆர்.சி.பி வெற்றி ஊர்வலத்திற்கு முன்பே மைதானம் வெளியே பெரும் கூட்டநெரிசல் ஏற்பட்டது. அதன் விளைவாக குறைந்தது 11 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெங்களூருவில் உள்ள சின்னஸ்வாமி மைதானம் அருகே நடைபெற்ற வெற்றிப் பரேட் நிகழ்விற்கு முன் ஏற்பட்ட நெரிசலில் குறைந்தபட்சம் 11 பேர் உயிரிழந்துள்ளனர்; பலர் காயமடைந்துள்ளனர்.
இந்த மகிழ்ச்சியைக் கிழித்தெறிந்தது ஒரு மரண நெரிசல். புதன்கிழமை மாலை, ஆர்.சி.பி வெற்றி ஊர்வலத்திற்கு முன்பே மைதானம் வெளியே பெரும் கூட்டநெரிசல் ஏற்பட்டது. அதன் விளைவாக குறைந்தது 11 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெங்களூருவில் உள்ள சின்னஸ்வாமி மைதானம் அருகே நடைபெற்ற வெற்றிப் பரேட் நிகழ்விற்கு முன் ஏற்பட்ட நெரிசலில் குறைந்தபட்சம் 11 பேர் உயிரிழந்துள்ளனர்; பலர் காயமடைந்துள்ளனர்.
புதன்கிழமை நடந்த இந்த சம்பவத்திற்கு சில நிமிடங்களுக்கு முன்பே, ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஐ.பி.எல் வெற்றியைக் கொண்டாட நகரம் முழுவதும் மகிழ்ச்சிப் பேரலையாகவே இருந்தது. 18 ஆண்டுகளாகக் காத்திருந்த ஆர்.சி.பி, கடந்த செவ்வாய்க்கிழமையன்று நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி, முதல்முறையாக சாம்பியனாக உயர்ந்தது.
வெற்றி ஊர்வலம் மற்றும் விழா:
புதன்கிழமையன்று காலை, ஆர்.சி.பி நிர்வாகம் ஒரு வெற்றி ஊர்வலத்தை அறிவித்தது. இது விதான சௌதாவிலிருந்து சின்னசாமி மைதானம் வரை திறந்த நவீன பேருந்தில் நடைபெற்றது. மைதானத்தில் நடைபெற்ற விழாவிற்கு பங்கு பெற, கட்டணமின்றி சில அனுமதி சீட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டன.
My fiancee was inside the stadium when the stampede happened. She said, she had no idea what was going on outside and only found out after coming out. I can't imagine how Kohli and the team must have felt upon hearing this heartbreaking news. I'm feeling really low right now🥹
— MNV Gowda (@MNVGowda) June 4, 2025
ஆனால், இந்த மகிழ்ச்சியைக் கிழித்தெறிந்தது ஒரு மரண நெரிசல். புதன்கிழமை மாலை, ஆர்.சி.பி வெற்றி ஊர்வலத்திற்கு முன்பே மைதானம் வெளியே பெரும் கூட்டநெரிசல் ஏற்பட்டது. அதன் விளைவாக குறைந்தது 11 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உணர்ச்சிகரமான பதிவு:
இந்தப் பேரழிவைச் சுற்றி சமூக ஊடகங்களில் பல உணர்ச்சிகரமான பதிவுகள் வெளியாகின. அதில் முக்கியமாக, @MNVGowda எனும் எக்ஸ் பயனர் ஒருவர், “என் வருங்கால மனைவி அந்த நேரத்தில் மைதானத்தில் உள்ளே இருந்தார். வெளியே என்ன நடக்கிறது என்பது அவருக்கு தெரியவே இல்லை. நிகழ்ச்சி முடிந்த பிறகுதான் தெரிந்தது. கோஹ்லிக்கும் குழுவிற்கும் இந்த செய்தியை கேட்டதும் என்ன உணர்ந்திருப்பார்கள் என நினைக்கும்போதே மனம் உடைந்து போகிறது. என் மனநிலை மிக மோசமாக இருக்கிறது” என்று பதிவு செய்துள்ளார்.
முன்னதாக நடந்த நிகழ்வுகள்:
ஆர்.சி.பி அணி ஹெச்.ஏ.எல் விமான நிலையத்தை வந்தடைந்து, அங்கிருந்து விதான சௌதாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, கன்னட மாநில முதல்வர் சித்தராமையா முன்னிலையில் பாராட்டப்பட்டனர். அதன் பிறகு தான் அவர்கள் சின்னசாவாமி மைதானத்திற்கு புறப்பட்டனர். மைதானம் மற்றும் விதான சௌதா ஆகிய இடங்களை சுற்றி ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடியிருந்தனர்.
கடைசியில், வெற்றி ஊர்வல அறிவிப்பு நேரம் கிடைக்கும் வரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், ரசிகர்களிடையே குழப்பம் ஏற்பட்டதுதான் இந்த நெரிசலுக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.