New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/02/boy-surives-fall-through-open-hatch.jpg)
இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி, செல்போனால் ஏற்படும் கவனக்குறைவு தொடர்பாக மீண்டும் ஒருமுறை மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
நமது தினசரி வாழ்க்கையின் அங்கமாக மாறிவிட்ட செல்போன்கள், கவனத்தை சிதறடித்து பல்வேறு ஆபத்துகளுக்கு ஈட்டு செல்கிறது.
அந்த வகையில், துருக்கி மால் ஒன்றில், செல்போன் பார்த்தப்படியே நடந்துக்கொண்டிருந்த இளைஞர், திறந்துகிடந்த துளையின் வழியாக கீழே விழுந்த சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது.
இச்சம்பவம் அங்கிருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளில் பதிவாகியுள்ளது.
அதில், துருக்கியின் இஸ்தான்புலில் உள்ள ஒரு மாலில், செல்போனை பார்த்துக்கொண்டே ஒரு இளைஞன் நடந்து செல்வதை காண முடிகிறது. முழு கவனத்தையும் செல்போன் மீது வைத்திருந்த இளைஞர், திறந்து கிடந்த துளையை கவனிக்காமல் அதன் மீது கால் வைத்திட, சட்டேன கீழ் தளத்திற்கு சென்றுள்ளார்.
ஆனால், கீழ் தளத்தில் அடுக்கிவைக்கப்பட்டுள்ள பாக்ஸ்கள் மீது விழுந்ததால், நல்வாய்ப்பாக காயமின்றி தப்பித்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி, செல்போனால் ஏற்படும் கவனக்குறைவு தொடர்பாக மீண்டும் ஒருமுறை மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து குறித்து டெய்லிமெயிலுக்கு பேட்டியளித்த அந்த இளைஞர் அப்துல்லா முட், " நான் துளை திறந்திருப்பதை கவனிக்கவில்லை. கீழே விழுந்துவிட்டேன். ஆனால், அதிஷ்டவசமாக பாக்ஸ் மீது விழுந்தேன். அவர்கள் பொருள்களை மாற்றிக்கொண்டிருந்தார்கள். நான் பிறகு வேலைக்கு சென்றுவிட்டேன்" என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.