New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/02/n18fKMDzG6drDeJILxUm.jpg)
ரீல்ஸ் மோகம்.. ஆபத்தை உணராமல் ஓடும் ரயிலில் படிக்கட்டில் நடனமாடிய பெண்! வைரல் வீடியோ
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஓடும் ரயிலில் படிக்கட்டில் ஆபத்தான முறையில் நடனமாடிய செய்த வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வேமாக பரவி வருகிறது. படிக்கட்டில் நின்றபடி, இன்ஸ்டா ரீல்ஸ் செய்துள்ளார்.
ரீல்ஸ் மோகம்.. ஆபத்தை உணராமல் ஓடும் ரயிலில் படிக்கட்டில் நடனமாடிய பெண்! வைரல் வீடியோ
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஓடும் ரயிலில் படிக்கட்டில் ஆபத்தான முறையில் நடனமாடிய செய்த வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வேமாக பரவி வருகிறது. படிக்கட்டில் நின்றபடி, இன்ஸ்டா ரீல்ஸ் செய்துள்ளார்.
நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த பெண் என்று தெரியவந்துள்ளது. நாமக்கல்லில் இருந்து நாகர்கோவில் செல்லும் விரைவு ரயிலில் பயணித்த பெண் ஒருவர், ஓடும் ரயிலில் படிக்கட்டில் ஆபத்தான முறையில் பயணம் செய்த வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வேமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், அந்த பெண் ஓடும் ரயிலில் படிக்கட்டில் நின்று, இரண்டு கம்பிகளை பிடித்து தொங்கி வருவது காட்டுகிறது.
ரீல்ஸ் மோகம் - ஓடும் ரயிலில் படிக்கட்டில் நின்று ஆபத்தான ஆட்டம் போட்டு இன்ஸ்டாவில் பதிவிட்ட கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த இளம்பெண்.!
— Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர் (@Autokabeer) June 1, 2025
இப்பெண் மீது ரயில்வே துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைதளவாசிகள் கருத்து.#Kanyakumari #Kanniyakumari#Train #Reels… pic.twitter.com/YLdW5EBZMc
மேலும், அந்தப் பெண் ரயிலின் படிக்கட்டில் நின்று நடமாடியும் இருப்பதையும் வீடியோவில் காட்டுகிறது. இந்த வீடியோ வேகமாக பரவியதை அடுத்து, இளம்பெண் மீது நடவடிக்கை எடுத்து பலரும் கூறி வருகின்றனர். இதனை அடுத்து, ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கி உள்ளதாக தெரிகிறது. மேலும், சம்பந்தப்பட்ட பெண் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.