ரீல்ஸ் மோகம்.. ஆபத்தை உணராமல் ஓடும் ரயிலில் படிக்கட்டில் நடனமாடிய பெண்! வைரல் வீடியோ

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஓடும் ரயிலில் படிக்கட்டில் ஆபத்தான முறையில் நடனமாடிய செய்த வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வேமாக பரவி வருகிறது. படிக்கட்டில் நின்றபடி, இன்ஸ்டா ரீல்ஸ் செய்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஓடும் ரயிலில் படிக்கட்டில் ஆபத்தான முறையில் நடனமாடிய செய்த வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வேமாக பரவி வருகிறது. படிக்கட்டில் நின்றபடி, இன்ஸ்டா ரீல்ஸ் செய்துள்ளார்.

author-image
WebDesk
New Update
danger video goes viral

ரீல்ஸ் மோகம்.. ஆபத்தை உணராமல் ஓடும் ரயிலில் படிக்கட்டில் நடனமாடிய பெண்! வைரல் வீடியோ

சமூக வலைதளங்களில் ரீல்ஸ் மூலம் வீடியோ வெளியிடுவதைப் பெரும்பாலானோர் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். மேலும், அதிகமான லைக்குகள் கிடைப்பதற்காக பலர் சர்ச்சைக்குரிய வீடியோக்களை எடுத்து ரீல்ஸ் பதிவிட்டு வருகின்றனர். அதே நேரத்தில், சிலர் ரீல்ஸுக்காக உயிரைப் பணயம் வைக்கிறார்கள். சமூக வலைதளங்களில் ஆக்கப்பூர்வமாக விஷயங்கள் அதிகம் இருந்தாலும், மறுபக்கம் லைக்குகுளைப் பெறுவதற்காக உயிருக்கே ஆபத்தை விளைவிக்க கூடிய வீடியோக்களை சமூக வலைதளங்களில்  பலரும் பதிவிட்டு வருகின்றனர். ஆபத்தை உணராமல் ரீல்ஸ் எடுப்பது தொடர் கதையாகி வருகிறது. அப்படி ஒரு சம்பவம்தான் தமிழகத்தில் நடந்துள்ளது. 
Advertisment

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஓடும் ரயிலில் படிக்கட்டில் ஆபத்தான முறையில் நடனமாடிய செய்த வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வேமாக பரவி வருகிறது. படிக்கட்டில் நின்றபடி, இன்ஸ்டா ரீல்ஸ் செய்துள்ளார். 

நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த பெண் என்று தெரியவந்துள்ளது. நாமக்கல்லில் இருந்து நாகர்கோவில் செல்லும் விரைவு ரயிலில் பயணித்த பெண் ஒருவர், ஓடும் ரயிலில் படிக்கட்டில் ஆபத்தான முறையில் பயணம் செய்த வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வேமாக பரவி வருகிறது.  அந்த வீடியோவில், அந்த பெண் ஓடும் ரயிலில் படிக்கட்டில் நின்று, இரண்டு கம்பிகளை பிடித்து தொங்கி வருவது காட்டுகிறது.

Advertisment
Advertisements

மேலும், அந்தப் பெண்  ரயிலின் படிக்கட்டில் நின்று நடமாடியும் இருப்பதையும் வீடியோவில் காட்டுகிறது. இந்த வீடியோ வேகமாக பரவியதை அடுத்து,  இளம்பெண் மீது நடவடிக்கை எடுத்து  பலரும் கூறி வருகின்றனர்.  இதனை அடுத்து, ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கி உள்ளதாக தெரிகிறது. மேலும், சம்பந்தப்பட்ட பெண் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Viral

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: