/indian-express-tamil/media/media_files/2025/06/12/itWjpodhRPpOGvXfmvXl.jpg)
Air India pilot gave Mayday call to Ahmedabad ATC before crash, says DGCA
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
Jun 12, 2025 18:53 IST
குறுவைத் தொகுப்பு அறிவிக்காதது ஏன்? - அன்புமணி
பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், குறுவை சாகுபடிக்கான குறுவைத் தொகுப்புத் திட்டம் இன்று வரை அறிவிக்கப்படவில்லை; நெல்லுக்கு முதலமைச்சர் அறிவித்துள்ள கொள்முதல் விலையும் உழவர்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. உழவர்களின் நலனுக்காக எதையும் செய்யாமல் துரோகம் செய்வதை மட்டுமே தமிழக அரசு தொழிலாகக் கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது எனத் தெரிவித்துள்ளார்.
-
Jun 12, 2025 18:42 IST
ஏர் இந்தியா விமானம் விபத்து; ஓ.பி.எஸ்.இரங்கல்
அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து 242 பேருடன் இன்று இலண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானதில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வந்துள்ள செய்தி அறிந்து ஆற்றொணாத் துயரமும் மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
-
Jun 12, 2025 18:03 IST
தமிழக அரசு நிகழ்ச்சியில் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி
அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கோயமுத்தூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோளின்படி ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
-
Jun 12, 2025 18:01 IST
விமானம் விபத்துக்குள்ளானது மிகுந்த வருத்தம் அளிக்கிறது - விஜய்
ஏர் இந்தியா விமான விபத்துக்கு த.வெ.க. தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "242 பயணிகளுடன் சென்ற ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்." என அவர் தெரிவித்துள்ளார்.
-
Jun 12, 2025 18:00 IST
அடுத்த 3 மணி நேரத்துக்கு 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், ராணிப்பேட்டை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விழுப்புரம், திருவண்ணாமலை, தேனி, தென்காசி, திண்டுக்கல், நீலகிரி, விருதுநகர், கோயம்புத்தூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Jun 12, 2025 15:52 IST
சென்னைக்கு திரும்பிய அகமதாபாத் விமானம்
விமான விபத்தை தொடர்ந்து அகமதாபாத் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதால், சென்னையில் இருந்து 182 பயணிகளுடன் அகமதாபாத் சென்ற விமானம் அங்கே தரையிறங்க முடியாமல் மீண்டும் சென்னைக்கு திரும்பி வந்து கொண்டிருக்கிறது
-
Jun 12, 2025 14:24 IST
தமிழ்நாட்டு செஸ் வீரர்களை அழைத்துப் பாராட்டிய உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாட்டு செஸ் வீரர்களை அழைத்துப் பாராட்டிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். நார்வே செஸ் தொடரில் குகேஷ் 3ம் இடம் பிடித்திருந்தார். Stepan Avagyan நினைவு செஸ் போட்டியில் அரவிந்த் சிதம்பரம் முதலிடம். Stepan Avagyan நினைவு செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா 2ம் இடம்.
-
Jun 12, 2025 14:21 IST
ருத்ராஸ்திரா போர் விமான சோதனை வெற்றி
SDAL நிறுவனம் நடத்திய ருத்ராஸ்திரா போர் விமான சோதனை வெற்றி போக்ரான் துப்பாக்கிச் சூடு தளத்தில் நடந்த சோதனையில் 170 கி.மீ. தூரம் கடந்து வெற்றி
-
Jun 12, 2025 14:17 IST
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிலை என்ன? அமித்ஷாவுக்கு முக.ஸ்டாலின் கேள்வி
மத்திய அமைச்சர் அமித்ஷா மதுரை வந்த போது தனது ஆத்திரத்தை கொட்டித் தீர்த்துள்ளார். மதுரை வந்த அமித்ஷா அங்கு கட்டப்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனையை நேரில் போய் பார்த்தாரா? 10 ஆண்டுகளாக கட்டி வருவதற்கு மதுரை எய்ம்ஸ் என்ன விண்வெளி ஆராய்ச்சி நிலையமா? முறையாக நிதியை ஒதுக்கி இருந்தால் மதுரையில் 2 ஆண்டுகளில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி இருக்கலாம் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
Jun 12, 2025 14:14 IST
துணை ஜனாதிபதியும் ஜெகதீப் தன்கர் வரும் 17ம் தேதி புதுவை வருகை
புதுவை பல்கலைக்கழக வேந்தருமான துணை ஜனாதிபதியும் ஜெகதீப் தன்கர் வரும் 17ம் தேதி புதுவை பல்கலைக்கழகத்திற்கு வருகிறார்.
புதுவை பல்கலைகழக மாணவர்கள். போரசிரியர்கள் மற்றும் ஊழியர்களுடன் கலந்துரையாட துணை ஜனாதிபதியும் மற்றும் புதுவை பல்கலைக்கழக வேந்தருமான ஜெகதீப் தன்கர் அவர்கள் வரும் 17ம் தேதி புதுவை பல்கலைக்கழகத்திற்கு வருகிறார்.
புதுவை பல்கலைக்கழகத்தில் டாக்டர். பி. ர். அம்பேத்கர் நிர்வாக வளாகத்தில் உள்ள ஜவாஹர்லால் நேரு அரங்கத்தில் வருகிற 17ம் தேதி, செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார் அதன்படி, நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழக நிர்வாகம் செய்து வருகிறது.
-
Jun 12, 2025 13:39 IST
பொன்முடி ஆஜராக விலக்கு கிடைக்குமா? ஜூன் 21ல் உத்தரவு
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி முன்னாள் அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த மனு மீது வரும் 21ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
-
Jun 12, 2025 12:06 IST
மாற்றுத்திறனாளிகள், முதியோர் மெரினா கடற்கரைக்கு எளிதில் செல்லும் வகையில், பேட்டரி வேன் சேவை தொடங்கப்பட்டுள்ளது!
மாற்றுத்திறனாளிகள், முதியோர் மெரினா கடற்கரைக்கு எளிதில் செல்லும் வகையில், பேட்டரி வேன் சேவை தொடங்கப்பட்டுள்ளது. சர்வீஸ் சாலைகளில் 4 இடங்களில் வாகன நிறுத்தம் அமைத்து, முதற்கட்டமாக 2 வாகனங்களை பயன்பாட்டிற்கு சென்னை மாநகராட்சி கொண்டு வந்துள்ளது.
-
Jun 12, 2025 12:05 IST
“UPSC தேர்வில் இதுவரை இல்லாத எண்ணிக்கையில் சாதனை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
தமிழ்நாடு அரசின் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியிலும் நான்முதல்வன் திட்டத்திலும் பயின்ற நம் மாணவர்கள் UPSC முதனிலைத் தேர்வு முடிவுகளில் இதுவரை இல்லாத எண்ணிக்கையில் சாதனை படைத்துள்ளனர். முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்விலும் அடுத்து நீங்கள் முத்திரை பதிக்க வாழ்த்துகிறேன். உங்கள் வெற்றிமுகங்களை நேரில் காண ஆவலாய் இருக்கிறேன். இந்தச் சாதனைக்கு உறுதுணையாக இருந்த அதிகாரிகளுக்கும் பயிற்றுநர்களுக்கும் என் பாராட்டுகளை உரித்தாக்குகிறேன். தமிழ்க்கொடி உயர உயரப் பறக்கட்டும்.
-
Jun 12, 2025 12:03 IST
பல்வேறு நாடுகளுடன் பேச்சு நடப்பதால் வரி விதிப்புக்கான காலக் கெடுவை நீட்டிக்க டிரம்ப் விருப்பம்
நாடுகளுடன் பேச்சு நடப்பதால் வரி விதிப்புக்கான காலக் கெடுவை நீட்டிக்க உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். ஜூலை 9 வரை நிறுத்திவைத்துள்ள வரி விதிப்பு அவகாசத்தை மேலும் நீட்டிக்க டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளார்.
-
Jun 12, 2025 12:03 IST
கட்டுமான தொழிலாளர்கள் ஓய்வெடுக்க புதிய ஏற்பாடு!
கட்டுமான தொழிலாளர்கள் ஓய்வெடுக்க புதிய ஏற்பாடு செய்துள்ளனர். தொழிலாளர் நலத்துறை மற்றும் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் இருந்து தகவல்கள் பெறப்பட்டு, கட்டுமான தொழிலாளர்கள் அதிகம் கூடம் 3 இடங்களில் ஓய்வுக் கூடங்கள் அமைய உள்ளன. அதற்கான மாதிரி புகைப்படத்தை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் பகிர்ந்தார்.
-
Jun 12, 2025 11:37 IST
பா.ஜ.க சார்பில் குருமூர்த்தி பேசவில்லை - ராமதாஸ்
"குருமூர்த்தி, சைதை துரைசாமி பா.ஜ.க சார்பில் வரவில்லை. தனிப்பட்ட முறையில் தான் வந்தார்கள். இந்தப் பிரச்னையை தனிப்பட்ட முறையில் பேசி தீர்க்க வேண்டும் என்ற நோக்கில் பேசினார்கள். பா.ஜ.க சார்பிலோ, அமிதா சார்பிலோ யாரும் என்னிடம் பேசவில்லை" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
-
Jun 12, 2025 11:34 IST
கட்டுமான தொழிலாளர்கள் ஓய்வெடுக்க புதிய ஏற்பாடு!
தொழிலாளர் நலத்துறை மற்றும் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் இருந்து தகவல்கள் பெறப்பட்டு, கட்டுமான தொழிலாளர்கள் அதிகம் கூடம் 3 இடங்களில் ஓய்வுக் கூடங்கள் அமைய உள்ளன. அதற்கான மாதிரி புகைப்படத்தை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் பகிர்ந்தார்.
-
Jun 12, 2025 11:32 IST
ஆந்திராவில் மாணவர்களின் தாயார் வங்கிக் கணக்குகளில் கல்வி உதவித் தொகை
ஆந்திர பிரதேசத்தில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் தாயார் வங்கிக் கணக்குகளில் கல்வி உதவித் தொகையாக ஆண்டுக்கு ரூ. 15,000 செலுத்தும் புதிய திட்டம் அமலுக்கு வந்தது. இதன் மூலம் 67 லட்சம் மாணவர்கள் பயனடைவர் என தகவல் தெரிவித்தனர்.
-
Jun 12, 2025 11:20 IST
"தேர்தலுக்கு பிறகு அன்புமணி வசம் கட்சி" - ராமதாஸ் பேச்சு
"2026 சட்டப்பேரவை தேர்தல் வரை நான் தலைவர் பதவியில் இருப்பேன். 2026 தேர்தலுக்கு பிறகு கட்சியின் தலைவர் பதவியை அன்புமணி எடுத்துக் கொள்ளட்டும். இதுதான் என் முடிவு" என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
-
Jun 12, 2025 11:05 IST
நானே அன்புமணிக்கு முடிசூட்டு விழா நடத்தி இருப்பேன் - பா.ம.க நிறுவனர் ராமதாஸ்
தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ம.க நிறுவனர் ராமதாஸ், “எனக்கும் செயல் தலைவருக்கும் போய்க் கொண்டிருக்கும் பிரச்சனை உங்களுக்கு யாருக்கும் முழுமையாக தெரிய வாய்ப்பில்லை. பாமகவில் ஏற்பட்டுள்ள பிரச்சனை குறித்து நடத்திய சமரச பேச்சுவார்த்தை டிராவில் முடிந்தது. சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட இருவர் யார் என்பது உங்களுக்கு தெரியும். என்னை தேடி வந்த 14 பஞ்சாயத்துகாரர்களும் ஒரே விதமான தீர்ப்பையே சொன்னார்கள். எல்லாம் தனக்கே வேண்டும் என்று அன்புமணி சொல்கிறார். என்னை தைலாபுரம் வீட்டுக்குள் இருந்து பேரன், பேத்திகளோடு விளையாடிக்கொண்டு இருக்குமாறு சொல்கின்றனர்.
தலைவர் பதவியை நான் விட்டுக்கொடுக்க தயாராக இருந்தும் அன்புமணி நம்பவில்லை. அதன் பின்பு என்னோடு இருந்த கோபம் வெளிப்பட்டது; நீயா? நானா? என பார்த்துவிடுவோம் என முடிவு செய்துவிட்டேன். 46 ஆண்டுகள் கட்சியை கட்டிக்காத்த எனக்கு இன்னும் ஓரிரு ஆண்டுகள் கட்சியின் தலைமையேற்க எனக்கு உரிமை இல்லையா?. என்னை சந்திக்கக் கூடாது என ஒவ்வொரு நிர்வாகிக்கும் அன்புமணி தொலைபேசியில் அழைத்துப் பேசியுள்ளார். மாவட்ட நிர்வாகிகளை அழைத்து என்னை சந்திக்க வேண்டாம் என்று அன்புமணி கூறினார். ஒவ்வொரு செங்கலாக பார்த்து கட்டி எழுப்பிய பா.ம.க என்ற மாளிகையில் நான் யாரை குடியமர்த்தினேனோ அவரே வெளியே தள்ளிவிட்டார்.
அன்று அமைதி காத்திருந்தால் அன்புமணிக்கு அதிகாரம் தானாக வந்திருக்கும். ஓரிரு ஆண்டுகள் பொறுத்திருந்தால் நானே அன்புமணிக்கு முடிசூட்டு விழா நடத்தியிருப்பேன். தந்தைக்கு பிறகே தனயன்; அய்யாவுக்கு பிறகே அன்புமணி என்பதே எல்லோரும் சொல்லும் வார்த்தை. குருவுக்கு மிஞ்சிய சீடன் இருக்கலாம்; ஆனால் தந்தைக்கு மிஞ்சிய தனயன் கூடாது; இதுவே நீதி, நேர்மை, தர்மம்." என்று அவர் கூறியுள்ளார்.
-
Jun 12, 2025 10:54 IST
மழை நீர் தேங்காமல் தடுக்க கால்வாய் - சென்னை விமான நிலையத்தில் அமைக்கும் இந்திய விமான நிலைய ஆணையம்
சென்னை விமான நிலையத்திற்குள், விமான போக்குவரத்துக்கு இடையூறாக ஓடுபாதைகள் மற்றும் விமானங்கள் நிறுத்தும் இடங்களில், மழை நீர் தேங்காமல் தடுக்க விமான நிலைய வளாகத்திற்குள் 4.3 கி.மீ. நீளத்திற்கு புதிய மழைநீர் கால்வாய் கட்டும் பணியை இந்திய விமான நிலைய ஆணையம் தொடங்கியுள்ளது. இந்த கால்வாய் வழியாக மழைநீர் அடையாறு ஆற்றில் கலக்கும் விதத்தில், கால்வாய் அமைக்கப்படுகிறது. சென்னை ஐஐடி நிபுணர்களின் ஆலோசனைகளின் பெயரில், இந்த மழைநீர் கால்வாய் அமைக்கப்படுவதாக, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
-
Jun 12, 2025 10:53 IST
“குலசாமி என்று கூறிக் கொண்டே என் நெஞ்சில் குத்துகிறார்கள்” - ராமதாஸ் வேதனை
"3 ஆண்டுகளுக்கு முன்பு அன்புமணிக்கு முடி சூட்டு விழா நடந்தது. அப்போது நான் ஆனந்த கண்ணீர் விட்டேன். தந்தைக்கு பிறகே தனயன். எனக்கு பிறகே அன்புமணி என எல்லாரும் சொல்கிறார்கள். குருவை மிஞ்சிய சீடன் இருக்கலாம். தந்தையை மிஞ்சிய தனயன் இருக்க கூடாது என்பது உலக நியதி. குலசாமி என்று சொல்லிவிட்டு நெஞ்சு குலையில் குத்துகிறார்கள்" என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
-
Jun 12, 2025 10:44 IST
பேச்சுவார்த்தை டிராவில் முடிந்தது; நீயா? நானா? பார்த்துவிடுவோம்: அன்புமணி குறித்து ராமதாஸ் பரபர பேச்சு
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரத்தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த பா.ம.க நிறுவனர் ராமதாஸ், "பல் வலி காரணமாக சென்னைக்கு சென்றிருந்தேன். தண்ணீர் விட்டே வளர்த்தோம் சர்வேசா, இப்பயிரை கண்ணீரால் காத்தோம். எனக்கும் செயல் தலைவருக்கும் போய்க் கொண்டிருக்கும் பிரச்சனை உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. பேச்சுவார்த்தை பலனின்றி டிராவில் முடிந்தது. சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட இருவர் யார் என்பது உங்களுக்கு தெரியும்.
தலைவர் பதவியை விட்டுக் கொடுக்க தயாராக இருக்கிறேன் என்று சொல்லியும் அதை அன்புமணி நம்பவில்லை. அய்யாவை நம்ப முடியாது. எழுதிக் கொடுக்கச் சொல்லுங்கள் என்றார். எனக்குள் இருந்த கோவம் பொங்கி எழுந்தது. நீயா? நானா? பார்த்துவிடுவோம் என முடிவெடுத்துவிட்டேன்." என்று அவர் கூறியுள்ளார்.
-
Jun 12, 2025 10:34 IST
அ.தி.மு.க-வுக்கு இணையான தொகுதிகளில் பா.ஜ.க போட்டியிட வேண்டும் - மோடிக்கு அண்ணாமலை கடிதம்
2026 தேர்தலில் அதிமுக போட்டியிடும் தொகுதி எண்ணிக்கையில் சரிபாதியில் பா.ஜ.க போட்டியிட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். அ.தி.மு.க கூட்டணியில் பாஜக அடிப்படையில் தொகுதி பங்கீடு பெற்றால் கூட்டணி ஆட்சி நிச்சயம். அண்மையில் பாஜக பெற்ற ஓட்டு சதவீத அடிப்படையில் தொகுதி பங்கீடு தேவை எனவும் அண்ணாமலை கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
-
Jun 12, 2025 09:39 IST
தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு!
தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது. கிராம் ரூ.9100க்கு விற்பனையாகிறது.
-
Jun 12, 2025 09:26 IST
நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு
திருச்செந்தூரில் ஜூன் 14 ஆம் தேதி நாதகவினர் நடத்த இருந்த பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்தக் கோரி கூட்டம் நடத்தவிருந்த நிலையில் மறுக்கப்பட்டுள்ளது.
-
Jun 12, 2025 09:24 IST
தொன்மத்துக்கு ஒரு நீதி; தொன்மைக்கு ஒரு நீதியா? - வைரமுத்து
ராமர் என்பது ஒரு தொன்மை; அதற்கு அறிவியல் ஆதாரங்கள் இல்லை; நம்பிக்கையே அடிப்படை; ராமரின் தொன்மத்தை ஏற்றுக் கொண்டவர்கள் கீழடியின் தொன்மையை ஏற்காதது என்ன நியாயம்? கீழடி தொன்மையை மெய்ப்பிக்க அறிவியல் தரவுகள் தேவையென்று சொல்வதா?
ஒரு தமிழ்க் குடிமகனாக மத்திய அமைச்சருக்கு எங்கள் வலியின் வலியைப் புலப்படுத்துகிறேன்; கீழடி தொன்மைக்கான கரிமச் சோதனைகள் அமெரிக்காவில் சோதித்து முடிவெடுக்கப்பட்டவை; கீழடியின் தொன்மை என்பது அறிவியலே அடிப்படை என கவிஞர் வைரமுத்து x தளத்தில் பதிவிட்டுள்ளார்.
-
Jun 12, 2025 08:34 IST
பாமக பொறுப்பாளரின் உடல் சடலமாக மீட்பு!
பாமக-வின் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட இளைஞரணித் தலைவராக செயல்பட்டு வந்த சோளிங்கர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் சக்ரவர்த்தி (48), நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, தலையில் காயங்களுடன் சாலையோரம் சடலமாக கிடந்துள்ளார். சாலை விபத்தா? அல்லது கொலையா? என்ற கோணத்தில் காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
Jun 12, 2025 08:33 IST
`ராகிங்'-89 உயர்கல்வி நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
ராகிங் தடுப்பு நடவடிக்கையை பின்பற்றாததால், 5 தமிழக பல்கலைக்கழகங்கள் உட்பட 89 உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
-
Jun 12, 2025 08:32 IST
கேரளா சரக்கு கப்பலில் மீண்டும் கரும்புகை
கேரளா காசர்கோடு அருகே சரக்கு கப்பலில் தீ கட்டுக்குள் வந்தபோதும் மீண்டும் கரும்புகை எழுகிறது. தீயை கட்டுப்படுத்திய நிலையில் விபத்து ஏற்பட்ட கப்பலை ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கப்பலில் இருந்து 20க்கும் மேற்பட்ட கண்டெய்னர்கள் கடலில் மூழ்கியதாக தகவல் வெளியானதால் சோதனை. அரபிக்கடலில் பேக்கல் பகுதியில் 4 நாட்களுக்கு முன் சரக்கு கப்பலில் தீ விபத்து ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளது.
-
Jun 12, 2025 08:04 IST
அமெரிக்கா - சீனா இடையே உறுதியான வர்த்தக ஒப்பந்தம்
சீனா அமெரிக்காவுக்கு காந்தங்கள், அரிதான தனிமங்களை வழங்கும் என்றும், சீன மாணவர்களுக்கான விசாக்களை அமெரிக்கா அனுமதிக்கும் என்றும் டிரம்ப் அறிவித்துள்ளார்.
-
Jun 12, 2025 08:04 IST
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து உயர்வு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை எதிரொலியாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 7000 கனஅடியாக உயர்ந்துள்ளது.
-
Jun 12, 2025 07:51 IST
ரேண்டம் எண் வெளியீடு
தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்விற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் என்ற இணையதளத்தில் tneaonline.org சென்று பார்த்துக் கொள்ளலாம்.
-
Jun 12, 2025 07:48 IST
மகளிரை அவமதிக்கும் திமுக அரசு திருந்தட்டும் - நயினார் நாகேந்திரன்
அதிகார மமதையில் எளிய மக்களை எள்ளி நகையாடி ஏளனப்படுத்துவது ஏற்புடையதல்ல. ஓசி பஸ் எனக் கூறி மகளிரை அவமதிக்கும் திமுக அரசு இனியாவது திருந்தட்டும் என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
-
Jun 12, 2025 07:23 IST
ட்ரம்ப் குறித்த கருத்துகளுக்குகாக மன்னிப்பு கோரிய எலான் மஸ்க்!
தான் இல்லாவிட்டால் ட்ரம்ப் தோல்வி அடைந்திருப்பார் எனவும், சிறுமிகள் பாலியல் குற்றச் சம்பவம் தொடர்பான ரகசிய ஆவணத்தில் ட்ரம்ப் பெயர் இருப்பதாகவும் கூறி பரபரப்பை கிளப்பியிருந்தார் எலான் மஸ்க்.
-
Jun 12, 2025 07:23 IST
நீலகிரி, கோவைக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்
நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, நெல்லையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Jun 12, 2025 07:21 IST
மேட்டூர் அணை திறப்பு
காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
-
Jun 12, 2025 07:20 IST
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.