
வி.கே.சசிகலா குடும்பத்தினரின் இல்லங்களில் நடந்த வருமான வரித்துறை ரெய்டு மெகா தோல்வி அடைந்துவிட்டதாக திவாகரன் கூறியிருக்கிறார்.
வருமான வரித்துறை சோதனை விவகாரத்தில் டி.டி.வி.தினகரன் கூறியதை விவேக் ஜெயராமனும், அவரது சகோதரி கிருஷ்ணபிரியாவும் மாற்றிப் பேசியது ஆச்சர்யம் தருகிறது.
வி.கே.சசிகலா குடும்பத்தினர் மீதான வருமான வரி துறை விசாரணை ஜரூராக நடக்கிறது. இன்று சசிகலாவின் அண்ணன் மகள்கள் கிருஷ்ணபிரியா, ஷகிலா ஆஜரானார்கள்.
‘நான் காந்தி பேரன் இல்லை, என்னை குற்றம் சாட்டுகிறவர்கள் காந்தி பேரன்களா?’ என பாஜக குறித்து காரசாரமாக இன்று கேள்வி எழுப்பினார் டி.டி.வி.தினகரன்.
3-வது நாளாக சசிகலா தரப்பிடம் வருமான வரித் துறையினர் சோதனை நடத்துகிறார்கள். 60 போலி நிறுவனங்கள் விவகாரத்தில் இளவரசி மகள் சிக்குவதாக தெரிகிறது.
ஜெயா டி.வி. நிர்வாக அதிகாரியான விவேக் இல்லத்தில் சோதனை நடத்த வந்த வருமான வரித்துறை அதிகாரிகளை சசிகலா ஆதரவாளர்கள் சோதனை போட்ட காமெடி நடந்தது.
தமிழகம் இதுவரை கண்டிராத வகையில் ஒரே நாளில் சசிகலா குடும்பத்தினரின் 187 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது குறித்து தலைவர்களின் கருத்து இங்கே…
சசிகலா பெயரில் 4 போலி நிறுவனங்கள் கண்டு பிடிக்கப்பட்டதாகவும், அவை தொடர்பாகவே இந்த ஐ.டி. ரெய்டு என வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
சசிகலா சொந்தங்களின் தமிழக சொத்துகளை மட்டுமல்லாமல், பாண்டிச்சேரியில் டி.டி.வி.தினகரனின் பண்ணை வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.
ஜெயா டிவி அலுவலகத்தில் இன்று காலை ஐ.டி அதிகாரிகள் புகுந்து சோதனை நடத்துகிறார்கள். டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவின் இதர உறவினர்கள் வீடுகளும் தப்பவில்லை.
நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டி.வி.யை கைப்பற்றுவோம் என எடப்பாடி – ஓ.பி.எஸ். தலைமையில் கூடிய அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்களின் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை முதல்முறையாக ‘நமது எம்.ஜி.ஆர்.’ நாளிதழ் தவிர்க்க ஆரம்பித்திருக்கிறது.