New Update
/tamil-ie/media/media_files/uploads/2018/12/idea-41.jpg)
கிரெடிட் கார்டு ஸ்வைப்பின் மதிப்பை அடிப்படையாகக் கொண்டு இக்கடன் வழங்கப்படுகிறது.
கடன்.. உலகில் பண தேவை இருக்கும் வரையில் கடன் தேவையும் இருக்கும். நல்லது, கேட்டது என எந்த காரியத்தை செய்ய வேண்டும் என்றாலும் முதலில் தேவை பணம். இருப்பவர்கள் ஈஸியாக செலவு செய்து விட்டு செல்வார்கள்.
ஆனால் இல்லாதவர்கள், அல்லது அதிகப் பணத்தேவை உடையவர்களுக்கு டக்குனு ஞாபகத்தில் வருவது யாரிடமாவது கடன் வாங்கலா? என்பது தான். இந்த பிரச்சனைக்கு உதவும் வகையில் தான் பல முன்னணி நிறுவனங்கள் கிரெடிட் கார்ட் என்ற வசதியை அறிமுகப்படுத்தினர்.
இதன் மூலம் உங்களுக்கு தேவைப்படும் போது கிரெடிட் கார்டை ஸ்வைப் செய்து பயன்படுத்தலாம். அல்லது டெபிட் கார்டை போலவே ஏடிஎம்மிலும் குறிப்பிட்ட வரையிலான தொகையை எடுத்துக் கொள்ளலாம்.
தெரிந்துக் கொள்ளுங்கள்... பிக்சட் டெசாபிட் திட்டத்தில் பட்டையை கிளப்பும் ஐசிஐசிஐ!
ஆனால், இதைவிட மிகச் சிறந்த திட்டம் ஒன்றும் தற்போது வழக்கத்தில் உள்ளது. அதுதான் கிரெடிட் கார்ட் மீது கடன். அவசரக்காலத்தில் இந்த வசதியை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
1. இதற்கு முதலில் வங்கி அதிகாரிகளிடம் இருந்து ஒப்புதல் பெற வேண்டும்.
2. நீங்கள் வங்கியில் கிரெடிட் கார்டு வாங்கும் போதே, அதில் ஒரு முன்பு ஒப்புதல் (pre-approved) செய்யப்பட்ட கடன் திட்டம் உங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருக்கும்.
3. கிரெடிட் கார்டு ஸ்வைப்பின் மதிப்பை அடிப்படையாகக் கொண்டு இக்கடன் வழங்கப்படுகிறது.
4. எந்தவித டாகுமென்ட்களோ அல்லது அப்ரூவல்களோ இன்றி உடனடியாக கடனை பெறலாம்.
5. கிரெடிட் கார்டின் வழியாகப் பெறப்படும் கடன் பணத்துக்கான வட்டி விகிதம் 15-20 சதவீதமாக உள்ளது.
6. ஐசிஐசிஐ, சிட்டி பேன்க், எச்.டி.எஃப்.சி மற்றும் எச்.எஸ்.பி.சி வங்கி போன்ற பல வங்கிகளும் இத்தகைய கடனை வழங்குகின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.