/tamil-ie/media/media_files/uploads/2019/01/photo.jpg)
ஐசிஐசிஐ
பணம் எடுக்க, டெபாசிட் செய்ய பயன்படும், ஏ.டி.எம் இயந்திரத்தில், இனி காசோலையை செலுத்தி ரொக்கம் பெறலாம். இந்த புதிய வசதியை, ஏ.டி.எம் தயாரிப்பு நிறுவனமான என்.சி.ஆர் கார்ப்பரேஷன் அறிமுகப்படுத்தியுள்ளது.
எஸ்.பி.ஐ உங்களுக்கு வழங்கும் மிகச் சிறந்த சலுகைகள் இவைதான்!
வங்கி வாடிக்கையாளர்கள், முதலில், ஏ.டி.எம் இயந்திரத்தில் உள்ள 'லைவ் டெல்லர்' பிரிவின் இணைப்பை பெற வேண்டும். ஒரு பொத்தானை அழுத்தி, இந்த இணைப்பை பெறலாம். உடனே, ஏ.டி.எம் இயந்திரத்தின் முழு கட்டுப்பாடும், வாடிக்கையாளரின் வங்கி அலுவலரிடம் வந்து விடும். அவர் அனுமதி அளித்ததும் ஏ.டி.எம் சாதனத்தில் காசோலையை செலுத்த வேண்டும்.
எஸ்.பி.ஐ உங்களுக்கு வழங்கும் மிகச் சிறந்த சலுகைகள் இவைதான்!
அத்துடன் ஏதாவது ஒரு அடையாளச் சான்றை, அந்த இயந்திரத்திலேயே 'ஸ்கேன்' செய்து, அளிக்க வேண்டும். இந்த நடைமுறை முடிந்ததும், ஏ.டி.எம் மானிட்டர் திரை மீது வாடிக்கையாளர் கையொப்பம் இட வேண்டும். இதை இயந்திரம் பரிசீலித்து ஒரு நிமிடத்திற்குள் பணம் வழங்கும்.
வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப, பல மதிப்புகளில் ரொக்கத்தை தேர்வு செய்யும் வசதியும் இதில் உள்ளது. இந்த முறையில் உள்ளூர் மற்றும் வெளியூர் காசோலைகளுக்கு உடனடியாக பணம் பெற முடியும். இந்த ஏ.டி.எம் இயந்திரத்தில் 'டெபிட்' கார்டு இல்லாமல் 'ஆதார்' எண்ணை தெரிவித்து ரொக்கம் பெறும் வசதியும் உள்ளது.
குறைந்த வட்டியில் கிரேடிட் கார்டு வழங்கும் வங்கி எது தெரியுமா?
அத்துடன் பணம் டெபாசிட் செய்வதற்கும் தன் விபரங்களை புதுப்பிப்பதற்கும் இந்த புதிய, ஏ.டி.எம்., பயன்படும். தற்போது இரண்டு வங்கிகள், இந்த புதிய ஏ.டி.எம்.,மை பயன்படுத்த துவங்கியுள்ளன. விரைவில் நாடு முழவதும் உள்ள வங்கிகளில் இது அமல்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள் ஜீரோ பேலன்சில் அக்கவுண்ட் தொடர இதுதான் சரியான நேரம்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.