Advertisment

நீங்கள் வேலை செய்யும் நிறுவனம் தீடீரென்று உங்களை வேலை விட்டு தூக்கிவிட்டதா? பயப்படாதீங்க உங்க பிஎஃப் பணம் கை கொடுக்கும்!

உங்களுக்குத் தெரியுமா?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
PF balance check online

PF balance check online

epfo online: ஊழியர்கள் வேலையில் இருந்து நின்றுவிட்டால் உங்கள் பிஃஎப் கணக்கில் இருந்து ஒரே மாதத்தில் 75% தொகையை எடுத்துக்கொள்ளலாம். இந்த தகவல் உங்களில் எத்தனை பேருக்கு தெரியும். பிஎஃப் கணக்கு என்றாலே அதில் பலருக்கும் பல சந்தேகங்கள் இருக்கும். அப்படிப் பிஎஃப் கணக்கில் உள்ள சந்தேகங்கள் மற்றும் புகார்களைத் தெரிவிக்க வருங்கால வைப்பு நிதி ஆணையம் http://epfigms.gov.in/ என்ற இணையதளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது என்று உங்களுக்குத் தெரியுமா?

Advertisment

மாத்தச் சம்பளம் வாங்கும் அனைவருக்கும் பிஎஃப் கணக்கு என்பது நிச்சயம் இருக்கும். பிஎஃப் கணக்கில் தெரிந்து வைத்திருக்க வேண்டிய முக்கிய விஷயங்களை இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

1. பிஎஃப் முதலீட்டுக்கும் நாமினி என்பது மிகவும் முக்கியம். வேலைக்குச் சேரும்போது பலரும் திருமணம் ஆகாமல் இருப்பார்கள். அப்போது பெற்றோரின் பெயரை நாமினி யாகக் காட்டியிருப்பார்கள். ஆனால், திருமணத்துக்குப் பிறகு நாமினியின் பெயரை மாற்றுவது முக்கியம். அதேபோல, நாமினியாக நாம் காட்டியவர் திடீரென இறந்துவிட்டால் புதிதாக வேறு ஒரு நாமினியை உடனடியாக நியமிப்பது அவசியம். வேலைப் பார்க்கும் நிறுவனத்தின் மூலமாகவோ அல்லது நேரடியாக பிஎஃப் அலுவலகத்துக்கோ சென்று புதிய நாமினியை நியமிக்கலாம்.

2.பத்து வருடத்துக்கு மேல் ஒருவர் பிஎஃப் கணக்கில் தொடர்ந்து பணம் செலுத்தி யிருந்தால் அவருக்கு பிஎஃப் பென்ஷன் கிடைக்கும். இந்த பென்ஷன் தொகையை 50 முதல் 58 வயதுக்குள் எப்போது வேண்டு மானாலும் திரும்ப வாங்கிக் கொள்ளலாம்.

3. பிஎஃப் தொகையை சில காரணங்களுக்கு மட்டும் இடையில் எடுக்க முடியும். இதற்கு குறைந்தபட்சம் 5 வருடம் பிஎஃப் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். அதாவது, பிஎஃப் உறுப்பினர், உறுப்பினரின் ரத்த உறவுகள், மகன்/மகளின் திருமணத்துக்கு, மருத்துவச் சிகிச்சை போன்றவற்றுக்குப் பணம் எடுக்கலாம்.

மேலும் வீடு வாங்கவும், வீட்டைப் புதுப்பிக்கவும் கடன் வாங்க முடியும். எந்தெந்த செலவு களுக்கு எவ்வளவு தொகை எடுக்க முடியும் என்பதை http://www.epfindia.com/site_en/WhichClaimForm.php இணைய தளத்தில் பார்க்கலாம்.

எச்டிஎப்சி வாடிக்கையாளர்களுக்கு வங்கி அறிவித்திருக்கும் மிகப் பெரிய ஆஃபர்!

4. பிஎஃப் கணக்கில் செலுத்தும் தொகை முழுவதும் இடையில் எடுக்க முடியாது. அதாவது, நிரந்தரமாக வேலையை விட்டுச் செல்லும்போதுதான் பணத்தை எடுக்க முடியும். 58 வயதுக்குமுன் சொந்த தொழில் செய்வதற்காக அல்லது மருத்துவ ரீதியான பிரச்னையினால் பணியிலிருந்து விலகும்போது, நிரந்தர ஊனம் ஏற்படும்போது, நிறுவனத்தை மூடும்போது பிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை வெளியே எடுக்க முடியும்.

Epfo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment