இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கி நிறுவனமான எஸ்பிஐ வீடு கட்டும் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களும் SBI Privilege Home Loan என்றும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
பொதுவாக அரசு ஊழியர்களுக்குக் சலுகைகள் அதிகம்தான். அவற்றுள் முதன்மையானது “அரசுப் பணியாளர் வீட்டுக்கடன்” திட்டம். காரணம், மிகக் குறைந்த வட்டி வீதம்; வட்டி கணக்கிடும் முறை இன்னும் சில சிறப்பம்சங்கள். அந்த வகையில் எஸ்பிஐ வங்கியும் இப்போது மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களும் SBI Privilege Home Loan என்றும் சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தி அதை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.
SBI Low Interest Rate Home Loans for Govt Employeesயாரெல்லாம் பெறலாம்!
இந்த திட்டம் மூலம் எஸ்பிஐ வங்கியில் வீட்டுக்கடன் வாங்கியிருக்கும் மத்திய மற்றும் அரசு ஊழியர்கள் பெண்களுக்கு வழங்கப்படும் குறைந்த வட்டி விகித கடன் நன்மையைப் பெற முடியும் என்பது கூடுதல் தகவல்.
எஸ்.பி.ஐ கஸ்டமர்ஸ்க்கு வங்கியின் மிக முக்கியமான அறிவிப்பு!
எஸ்பிஐ வங்கியில் மாத சம்பளதார்கள் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டுக்கடன் பெறும் போது பெண்களுக்கு 8.75% முதல் 8.85% வட்டி விகிதத்திலும், பிறருக்கு 8.80% முதல் 8.90% வட்டி விகிதத்திலும் கடன் வழங்கப்படுகிறது.
தனது பெயரில் வீட்டு மனை உள்ள பணியாளர் வீடு கட்டுவதற்குக் கடன் கோரலாம். கூரை மட்டம்வரை முதல் தவணையும், அதற்கு மேல் வீட்டைக் கட்டி முடிக்க இரண்டாவது தவணையும் கிடைக்கும்.
உங்களுக்காகவே எஸ்.பி.ஐ இந்த 5 சேமிப்பு திட்டங்களை வைத்திருக்கிறது
வீட்டு மனை இல்லாதோர் மனை வாங்கவும், வாங்கிய மனையில் வீடு கட்டவுமாக இரண்டுக்கும் ஒருசேர கடன் கேட்டு விண்ணப்பிக்கலாம்.பின்னர் வீட்டைக் கட்டி முடிக்க இரு தவணை என மொத்தம் மூன்று தவணைகளில் கடன் விடுவிக்கப்படும்.
பேங்கில் அக்கவுண்ட் இருக்கா? இவ்வளவு பெரிய மாற்றம் வந்தாச்சு உங்களுக்கு தெரியுமா?