home loans online : வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த சேவையை வழங்கிக் கொண்டிருக்கும் இரு தனியார் வங்கிகளான ஐ.சி.ஐ.சி.ஐ. , எச்.டி.எப்.சி. வங்கிகள் ரூ.30 லட்சம் வரையிலான வீட்டுக்கடனுக்கான வட்டியை 0.3 சதவீதம் குறைத்து இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது.
நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் 2022ம் ஆண்டுக்குள் சொந்த வீடு கிடைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். இதற்காக அனைவரின் வீட்டுக்கனவை நிறைவேற்றும் வகையில் ரூ.30 லட்சத்துக்கான கடனுக்கான வட்டியை குறைக்க அரசு வங்கிகளுக்கு அறிவுறுத்தியது. இதையடுத்து கடந்த வருடம் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் வங்கி 25 புள்ளிகள் வட்டியை குறைத்தது அறிவித்தது.
எச்டிஎப்சி வங்கியில் இஎம்ஐ கட்டும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!
எஸ்பிஐயின் இந்த அறிவிப்புக்கு பின்பு மற்ற தனியார் வங்கிகளும் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்பு வீண் போகவில்லை. உங்களுக்காகவே ஐ.சி.ஐ.சி.ஐ. எச்.டி.எப்.சி.வங்கிகள் வீட்டுக் கடனில் 0.3 சதவீதம் வட்டி விகிதத்தை குறைத்துள்ளன.
எச்டிஎப்சி வங்கி:
புதிதாக வீட்டுக்கடன் ரூ.30 லட்சம் வரை பெறும் பெண்களுக்கு வட்டி 8.35 சதவீதமாகவும், மற்றவர்களுக்கு 8.40 சதவீதம் வட்டியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ரூ. 30 லட்சம் முதல் ரூ.70 லட்சம் வரை கடன் பெறும் பெறும் வாடிக்கையாளர்ளுக்கான வட்டி 8.50 சதவீதம் என்பதில் மாற்றமில்லை.
ரூ.75 லட்சத்துக்கு அதிகமாக கடன் பெறும் வாடிக்கையாளர்களுக்கு வட்டி 8.75 சதவீதத்தில் இருந்து 8.55 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
பாங்க் ஆப் பரோடா கஸ்டமர்ஸ் இந்த தகவலை தெரிஞ்சு வச்சிக்கோங்க!
ஐசிஐசிஐ வங்கி:
ரூ.30 லட்சம் வரை வீட்டுக்கடன் பெறுபவர்களுக்கு வட்டி 0.3 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.
வேலைக்குச் செல்லும் பெண்கள் ரூ.30 லட்சம் வரை வீட்டுக்கடன் பெற்றால், அவர்களுக்கு வட்டி 8.35 சதவீதமும், மற்றவர்களுக்கு 8.40 சதவீதமும் வட்டி விதிக்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.