இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கி நிறுவனமான எஸ்.பி.ஐயில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ஏகப்பட்ட திட்டங்கள் மற்றும் சலுகைகள் உள்ளன. சமீபத்தில் ரூ.25,000க்கும் அதிகமாக வங்கிக்கணக்கில் இருப்புத்தொகை வைத்திருப்பவருக்கு ஏடிஎம்-இல் வரம்பற்ற பணப்பரிவர்த்தனை(Unlimited Transaction) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
மேலும் வாசிக்க... பல முறை அலைந்தும் வங்கியில் ஹோம் லோன் கிடைக்கலையா? இதுதான் காரணம்!
அதைத்தவிர மக்களுக்கு பயன்பெறும் வகையில் வேறுசில சலுகைகளும் உள்ளன. அதைப்பற்றி நீங்கள் இங்கே முழுமையாக தெரிந்துக் கொள்ளலாம்.
1. மெட்ரோ நகரங்களில் வழக்கமாக ஒரு மாதத்திற்கு 8 முறை ஏடிஎம்-இல் பணம் எடுத்துக்கொள்ளலாம். அதாவது எஸ்.பி.ஐ ஏடிஎம்-இல் 5 முறையும், மற்ற ஏடிஎம்-இல் 3 முறையும் எடுத்துக்கொள்ளலாம்.
2. மெட்ரோ அல்லாத நகரங்களில், எஸ்.பி.ஐ ஏடிஎம்-இல் 5 முறை, இதர ஏடிஎம்-இல் 5 முறை என மாதத்திற்கு 10 முறை பணம் எடுத்துக்கொள்ளலாம்.
3. மேற்குறிப்பிட்டதை தாண்டி, அதிகமுறை பணம் எடுப்பவருக்கு ரூ. 5 முதல் ரூ.20 வரை + ஜிஎஸ்டி அபராத கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
4. வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக்கணக்கில் ரூ.25,000க்கும் அதிகமாக இருப்புத்தொகையை வைத்திருந்தால் அவர்களுக்கு ஒரு சலுகை வழங்கப்படுகிறது. கடந்த மாதம் முழுவதும் ரூ.25,000க்கும் அதிகமாக இருப்புத்தொகையை வைத்திருந்தால், அவர்கள் நடப்பு மாதத்தில் எஸ்.பி.ஐ & எஸ்.பி.ஐ குரூப் ஏடிஎம்-இல் எவ்வளவுமுறை வேண்டுமானாலும் பணம் எடுத்துக்கொள்ளலாம்.
மிஸ் பண்ணாதீங்க... கடன் வேண்டுமா? ஐசிஐசிஐ ஏடிஎம் போனால் போதும்!
5. ரூ.25,000க்கும் குறைவாக இருப்புத்தொகை வைத்திருப்பவர்கள் வழக்கம் போல் 8 முதல் 10 முறை ஏடிஎம்-இல் பணம் எடுத்துக்கொள்ளலாம்.
6. எஸ்.பி.ஐ வங்கி குரூப் ஏடிஎம் களில் மேற்குறிப்பிட்ட முறைக்கு அதிகமாக பணம் எடுப்பவர்க்கு ரூ.10 வரை அபராத கட்டணமாக வசூலிக்கப்படும். எஸ்.பி.ஐ தவிர மற்ற ஏடிஎம் களில் குறிப்பிட்ட தடவைக்கு அதிகமாக பணம் எடுத்தால் ரூ.20 வரை அபராத கட்டணமாக வசூலிக்கப்படும்.
7. வங்கிக்கணக்கில் ரூ.1 லட்சத்திற்கும் அதிகமாக இருப்புத்தொகையை வைத்திருப்பவருக்கு எஸ்.பி.ஐ மற்றும் அனைத்து ஏடிஎம்-களிலும் எவ்வளவு முறை வேண்டுமானாலும் பணம் எடுத்துக்கொள்ளலாம். இதற்கு எந்த அபராத கட்டணமும் இல்லை.
8. எஸ்.பி.ஐயில் வேலை ஊதியம் வரும் வங்கிக்கணக்கிற்கும்(Salary Account) அனைத்து ஏடிஎம்-களிலும் வரையற்ற பணம் பெறும் வசதி உள்ளது.
9. எஸ்.பி.ஐ-யில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள், அவர்கள் சேமிப்பு கணக்கு வைத்துள்ள வங்கிக் கிளையை தவிர்த்து, அதன் பிற கிளைகளில் ரூ.25,000 மட்டும்தான் டெபாசிட் செய்ய முடியும் என்ற உச்சவரம்பு இருந்தது. தற்போது, அந்த உச்சவரம்பு முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது.
10. இதன்படி, வாடிக்கையாளர்கள் எந்த உச்ச வரம்பின்றியும் அதிகளவில் பணத்தை டெபாசிட் செய்யலாம். இந்தப் பணப்பரிமாற்றத்துக்கு ரூ.50, பரிவர்த்தனை கட்டணமாகவும், கூடுதலாக ஜி.எஸ்.டி வரியும் விதிக்கப்படும் .
பிள்ளைகளின் வருங்காலத்திற்கு பணம் சேர்க்க மிகச் சிறந்த திட்டம் எது தெரியுமா?