SBI ஏடிஎம் போக கண்டிப்பா செல்போன் தேவை... இல்லனா பணம் எடுக்க முடியாது! - புதிய திட்டம் அமல்
sbi otp cash withdrawal : இதன்படி, இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை, எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம்.களில் பணம் எடுக்கும் போது, வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண்ணுக்கு ஓடிபி வரும்
sbi latest updates: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ. முறைகேடுகளை தடுக்கும் நோக்கில், 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் எடுக்க, ஓடிபி (ஒருமுறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல்) முறையை, ஜன.1 2020 முதல் அமல்படுத்தியுள்ளது.
இந்த ஓடிபி எண்ணை பயன்படுத்தி மட்டுமே பணம் எடுக்க முடியும். இந்த முறை எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம்.களில் மட்டுமே செயல்படும்.வேறு வங்கி ஏ.டி.எம்.களில் இத்திட்டம் பொருந்தாது.
ஏற்கனவே, ஏ.டி.எம். கார்டுகள் இல்லாமலே பணம் எடுக்கும் யோனோ கேஷ் என்ற வசதியை, எஸ்.பி.ஐ. தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.