உங்கள் தேவைக்கு ஏற்ப குறைந்த வட்டியில் 4 விதமான கடனை எஸ்பிஐ வங்கி நடைமுறையில் வைத்துள்ளது. அதுக் குறித்து இங்கே விரிவாக தெரிந்துக் கொள்ளுங்கள்.அவசர காலத்தில் வங்கியிடம் கடன் பெற்று பயன் அடையுங்கள்.
1. வீட்டுக் கடன்:
சொந்தமாக வீட்டை வாங்க, பழைய வீட்டை சீரமைக்க மற்றும் ஏற்கனவே உள்ள வீடு மீது வீட்டுக் கடன் பெற முடியும் . எஸ்பிஐ வீட்டு கடன் திட்டம் மூலமாகக் கடன் பெறும் போது 8.35 முதல் 8.50 சதவீதம் வரை கடன் பெறலாம்.
2. கார் லோன்:
.வாகன கடன் கீழ் புதிய கார் வாங்குபவர்களுக்குக் கடன் அளிக்கப்படுகிறது. இந்தக் கடன் திட்டத்தின் கீழ் அனைத்து பயண வாகனங்கள், மல்டி யூடிலிட்டி வாகனங்கள் எஸ்யூவி என அனைத்து கார்களுக்குக் கடன் பெற முடியும். ஒவர் டிராப்ட் வசதியும் பெற முடியும்.
3. சொத்து கடன்:
தனிநபர்கள் சொத்துக்கள் மீது எஸ்பிஐ வங்கி கடன் அளிக்கிறது.எஸ்பிஐ வங்கி குறைந்தது 10 லட்சம் முதல் 7.5 லட்சம் கோடி ரூபாய் வரை சொத்துக்கள் எதிரான கடனை வழங்குகிறது. எஸ்பிஐ வங்கியில் குறைந்தது மாத வருமானம் 25,000 ரூபாய் வரை உள்ள தனிநபர்கள் ஆண்டுக்கு 3 லட்சம் ரூபாய் வரை சொத்துக்களை அடைமானம் வைத்து கடன் பெற முடியும்.
எச்டிஎப்சி வாடிக்கையாளர்கள் கவலையே பட வேண்டாம்.. உங்களுக்காக அருமையான திட்டம்!
4. பர்சனல் லோன்:
கடன் தேவைப்படும் போது எந்த ஒரு உத்தரவாதமும் இல்லாமல் தனிநபர் கடனை எஸ்பிஐ வங்கி அளிக்கிறது. மாத வருவாயில் 12 மடங்கு வரை தனிநபர் கடனாக எஸ்பிஐ வங்கி அளிக்கிறது.