SBI Updates: தகுதிவாய்ந்த கடன் பெறுபவர்களின் கோரிக்கைக்காக காத்திருக்காமல் தற்காலிகமாக இன்னும் மூன்று மாதங்களுக்கு, இ.எம்.ஐ செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க முடிவு செய்துள்ளதாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) புதன்கிழமை தெரிவித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வங்கிகளுக்கு கடன் வசூல் தடை நீக்க அனுமதித்ததிலிருந்து, கடன் வாங்கியவர்கள் நீட்டிப்பு இருக்குமா அல்லது அவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டுமா என்று தெரியாமல் தவித்து வந்தனர்.
நல்ல செய்தி: பிஎம்-கிஸான் பயனாளிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 ப்ளஸ் நன்மைகள்
2020 ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஈஎம்ஐ செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க தகுதி வாய்ந்த கடன் வாடிக்கையாளர்கள் அனைவரையும் அணுகியுள்ளதாக வங்கி புதன்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“இதற்காக, கிட்டத்தட்ட 8.5 மில்லியன் தகுதி வாய்ந்த கடன் பெறுபவர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம், ஈ.எம்.ஐ.களை செலுத்துவதில் இருந்து விலக்கு அளிப்பதற்கான செயல்முறையை வங்கி எளிமைப்படுத்தியுள்ளது. எஸ்.எம்.எஸ் பெற்ற ஐந்து நாட்களுக்குள் வங்கி அனுப்பிய எஸ்.எம்.எஸ்ஸில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு நியமிக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு (வி.எம்.என்) கடன் வாங்கியவர்கள் இ.எம்.ஐ களை ஒத்திவைக்க விரும்பினால் ஆம் என்று பதிலளிக்க வேண்டும்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எஸ்பிஐ தலைவர் ரஜ்னிஷ் குமார் மே 22ம் தேதி, தங்களது வங்கிகளில் கடன் வாங்கியவர்களில் சுமார் 20% பேர் இ.எம்.ஐ செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.
தொழிலாளர் வருங்கால வைப்பு பங்களிப்பு குறைவு; ஏற்படுத்தும் தாக்கம் என்ன?
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தினை 40 அடிப்படை புள்ளிகள் வரை குறைத்துள்ளது. இவ்வாறு குறைக்கப்பட்டுள்ள இந்த வட்டி விகிதங்கள் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.