சென்னையில் பள்ளிகளுக்கு டிசம்பர் 3-ம் தேதி வேலை நாள் – முதன்மை கல்வி அலுவலர்

சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் வருகின்ற 3-ம் தேதி (சனிக்கிழமை) வழக்கம்போல் செயல்படும் - முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு

சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் வருகின்ற 3-ம் தேதி (சனிக்கிழமை) வழக்கம்போல் செயல்படும் - முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு

author-image
WebDesk
New Update
சென்னையில் பள்ளிகளுக்கு டிசம்பர் 3-ம் தேதி வேலை நாள் – முதன்மை கல்வி அலுவலர்

சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு வருகின்ற 3-ம் தேதி (சனிக்கிழமை) பள்ளி வேலை நாள் என்று முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். தொடர் மழையால் பள்ளிகளுக்கு அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் சனிக்கிழமை பள்ளி செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இதையும் படியுங்கள்: உதவி செவிலியர் பயிற்சி படிப்பு; சென்னை மாநகராட்சி அறிவிப்பு

இருப்பினும், 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறாது என்றும், 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடர் பெருமழையின் காரணமாக சென்னை மாவட்டத்தில் இருக்கும் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அப்பணி நாட்களை ஈடுசெய்யும் வகையில் 03.12.2022 அன்று (சனிக்கிழமை) சென்னை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் திங்கள்கிழமை பாடவேளையைப் பின்பற்றி முழு பணி நாளாகக் கருதி செயல்பட வேண்டும் என அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

School Chennai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: