New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/06/tn-govt-jobs.jpg)
அரசு வேலைவாய்ப்பு
காஞ்சிபுரம் மாவட்ட சமூக பாதுகாப்புத்துறை வேலை வாய்ப்பு; 12 ஆம் வகுப்பு படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!
அரசு வேலைவாய்ப்பு
தமிழ்நாடு அரசின் சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் நலக்குழுவில் உதவியாளருடன் கலந்த கணினி இயக்குபவர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 15.09.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள்: சுகாதாரத் துறை வேலை; குறைந்தபட்ச தகுதி போதும்; மிஸ் பண்ணாதீங்க!
Assistant Cum Data Entry Operator
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சுத் தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 18 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 11,916
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s31543843a4723ed2ab08e18053ae6dc5b/uploads/2023/08/2023083066.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி : மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், எண். 317, K.T.S மணி தெரு, மாமல்லன் நகர், (மாமல்லன் பள்ளி அருகில்), காஞ்சிபுரம் - 631502
விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.09.2023
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s31543843a4723ed2ab08e18053ae6dc5b/uploads/2023/08/2023083066.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.