scorecardresearch

தீபாவளிக்கு மறுநாள் விடுமுறையா? அன்பில் மகேஷ் விளக்கம்

தீபாவளிக்கு மறுநாள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

தீபாவளிக்கு மறுநாள் விடுமுறையா? அன்பில் மகேஷ் விளக்கம்

தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அளிக்கப்படுமா என்பது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 24 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது திங்கட்கிழமை வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள பலரும், குறிப்பாக சென்னையில் உள்ளவர்கள், தீபாவளி பண்டிகையைக் கொண்டாட ஊருக்கு சென்றுள்ள நிலையில், தீபாவளிக்கு அடுத்த நாள் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலக வேலை நாளாக உள்ளது.

இதையும் படியுங்கள்: சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 81 பணியிடங்கள்; 8-ம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

இதனால் தீபாவளி அன்றே பலரும் சொந்த ஊரில் இருந்து கிளம்ப  வேண்டிய சூழல் உள்ளது. எனவே பல்வேறு தரப்பினரும், தீபாவளிக்கு மறுநாள் அதாவது செவ்வாய்க்கிழமை விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இதனிடையே புதுச்சேரியில் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், திருச்சி விமான நிலையத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அளிக்க வேண்டும் என்று பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதே கோரிக்கையை அரசு ஊழியர்களும் வைத்துள்ளனர். இந்தக் கோரிக்கை முதல்வரின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது. முதல்வர் விரைவில் அறிவிப்பார், என்று கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Minister anbil mahesh explains schools leave on next day to diwali