scorecardresearch

எம்.பி.பி.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற 2 வாய்ப்பு; உக்ரைன், சீனாவில் இருந்து திரும்பிய மாணவர்களுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி

ஒரு முறை விதிவிலக்காக, ஒரு நிபுணர் குழு பரிந்துரைத்தபடி மருத்துவ படிப்பு தேர்வில் தேர்ச்சி பெற ஒரு வாய்ப்பு வழங்க விருப்பம் தெரிவித்ததை அடுத்து, உச்ச நீதிமன்றம் 2 வாய்ப்பு வழங்கி அனுமதித்தது

mbbs students
பிரதிநிதித்துவ படம்

உக்ரைன் மற்றும் சீனாவில் இருந்து தங்கள் இறுதி ஆண்டு படிப்பில் இந்தியா திரும்பிய இளங்கலை மருத்துவ மாணவர்கள், இந்தியாவில் தங்களின் எம்.பி.பி.எஸ் (MBBS) இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற இரண்டு வாய்ப்புகளைப் பெறுவார்கள்.

ஒரு முறை விதிவிலக்காக, நிபுணர் குழு பரிந்துரைத்தபடி தேர்வில் தேர்ச்சி பெற அவர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்க விருப்பம் தெரிவித்ததை அடுத்து, உச்ச நீதிமன்றம் செவ்வாயன்று இதை அனுமதித்தது. மத்திய அரசு ஒரு வாய்ப்பை பரிந்துரைத்தாலும், நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் விக்ரம் நாத் ஆகியோர் அடங்கிய அமர்வு, இது போதாது என்று கருதி, இரண்டு வாய்ப்புகளை அனுமதிக்கும் வகையில் மாற்றியமைத்தது.

இதையும் படியுங்கள்: 12-ம் வகுப்பு கணித தேர்வு; கூடுதல் மதிப்பெண் வழங்க ராமதாஸ் வலியுறுத்தல்

ஒரு சிறிய மாற்றத்திற்கு உட்பட்டு, குழுவின் அறிக்கையை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்… MBBS இறுதித் தேர்வில், பகுதி I மற்றும் பகுதி II தேர்வுகளில் தேர்ச்சி பெற மாணவர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது, இதனை பகுதி I மற்றும் பகுதி II தேர்வுகள் (எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வு) இரண்டிலும் தேர்ச்சி பெற ஒற்றை/இரண்டு வாய்ப்புகள் வழங்கப்படும் என மாற்ற வேண்டும் என உத்தரவிட்டு, “பகுதி I மற்றும் பகுதி II தேர்வுகளுக்கு இரண்டு வாய்ப்புகள் இருக்கும்” என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. கோவிட் -19 மற்றும் உக்ரைன்-ரஷ்யா போரைத் தொடர்ந்து வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்களின் மனுவை நீதிமன்றம் விசாரித்தது.

டிசம்பர் 9, 2022 அன்று, தேசிய மருத்துவ ஆணையத்துடன் (NMC) கலந்தாலோசித்து “இந்த மனிதாபிமான பிரச்சனைக்கு தீர்வு காண” மத்திய சுகாதாரம், உள்துறை மற்றும் வெளியுறவு அமைச்சகங்களை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. மேலும், “தீர்வு காண ஒரு குழுவை நியமிப்பது குறித்து… மத்திய அரசு பரிசீலிக்கலாம்,” என்று நீதிமன்றம் கூறியது.

இந்த உத்தரவுக்கு பதிலளிக்கும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், சுகாதாரச் சேவைகள் இயக்குநர் ஜெனரல் தலைமையில் தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் மூன்று அமைச்சகங்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒரு குழு அமைக்கப்பட்டது என்று உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கமிட்டி இந்த பிரச்சினையை விவாதித்தது, விவாதத்தின் போது, ​​ பல்வேறு மாநிலங்களின் பிரதிநிதிகள் “வெளிநாட்டு மருத்துவ மாணவர்கள் பெற்றிருக்கக்கூடிய கல்வி மற்றும் பயிற்சியின் தரம் குறித்து தங்கள் இடஒதுக்கீட்டிற்கு குரல் கொடுத்தனர், எனவே படிப்பிற்கு இடையில் அவர்களுக்கு கல்லூரிகளில் இடமளிப்பதில் இட ஒதுக்கீடு இருந்தது”.

இறுதியாண்டில் திரும்பி வந்த மாணவர்கள், அதன்பின் ஆன்லைன் வகுப்புகளைத் தொடர வேண்டும் என்று குழு பரிந்துரைத்ததை அது சுட்டிக்காட்டியது, “தேசிய மருத்துவ ஆணையத்தின் பாடத்திட்டம் மற்றும் வழிகாட்டுதல்களின்படி, தற்போதுள்ள எந்த இந்திய மருத்துவக் கல்லூரியிலும் சேராமல், எம்.பி.பி.எஸ் இறுதி, பகுதி I மற்றும் பகுதி II தேர்வுகள் (எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வு இரண்டிலும்) தேர்ச்சி பெற ஒரே வாய்ப்பு வழங்கப்படலாம். அவர்கள் ஒரு வருட காலத்திற்குள் தேர்வில் தேர்ச்சி பெறலாம். பகுதி I ஐத் தொடர்ந்து ஒரு வருடத்திற்குப் பிறகு பகுதி II நடைபெறும். பகுதி I ல் தேர்ச்சி பெற்ற பின்னரே பகுதி II அனுமதிக்கப்படும்”.

“இந்திய எம்.பி.பி.எஸ் தேர்வின் மாதிரியில், எழுத்துத் தேர்வை பொதுவாகவும், நேரடியாகவும் நடத்தலாம் மற்றும் செய்முறை தேர்வை நியமிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகள் பொறுப்பேற்று நடத்தலாம்” என்றும் குழு பரிந்துரைத்தது.

“இந்த இரண்டு தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்ற பிறகு, அவர்கள் 2 வருட கட்டாய மருத்துவ பயிற்சியை முடிக்க வேண்டும், அதில் முதல் ஆண்டு இலவசம் மற்றும் முந்தைய வழக்குகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் முடிவு செய்தபடி இரண்டாம் ஆண்டுக்கு கட்டணம் செலுத்த வேண்டும்”, என குழு பரிந்துரைத்தது. “இது…கண்டிப்பாக ஒருமுறை மட்டும்தான் தேர்ந்தெடுக்கப்படும், எதிர்காலத்தில் இது போன்ற முடிவுகளுக்கு அடிப்படையாக மாறாது, நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் மட்டுமே தற்போதைய விஷயத்திற்குப் பொருந்தும்” என்று குழு வலியுறுத்தியது.

எவ்வாறாயினும், மாணவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பரிந்துரைகளை கேள்வி எழுப்பியதுடன், மாணவர்களுக்கு அரசாங்கம் மற்றொரு தடையை ஏற்படுத்தியுள்ளதாக வாதிட்டார்.

இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பின்பற்றப்படும் பாடத்திட்டங்களில் உள்ள வித்தியாசத்தைக் கருத்தில் கொண்டு ஒரு வாய்ப்பு போதுமானதாக இருக்குமா என்ற சந்தேகத்தையும் அவர்கள் எழுப்பினர்.

ஒரே ஒரு முறை மட்டுமே அவர்களை அனுமதிக்கும் நடவடிக்கை போதுமானதாக இருக்காது என்று ஒப்புக்கொண்ட பெஞ்ச், இதை இரண்டு வாய்ப்புகளாக மாற்றியமைக்க உத்தரவிட்டது. இருப்பினும் நிபுணர் குழுவின் மற்ற பரிந்துரைகள் எதிலும் தலையிட மறுத்துவிட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Relief mbbs students ukraine china sc attempts clear exams