Advertisment

சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; தகுதியுள்ளவர்கள் உடனே விண்ணப்பிங்க!

தென்காசி மாவட்ட சுகாதாரத்துறை வேலை வாய்ப்பு; தகுதியுள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
New Update
tn govt jobs

tn govt jobs

தென்காசி மாவட்ட பொது சுகாதாரத்துறையின் கீழ் ஆரம்ப சுகாதார நிலையத்தில் துணை செவிலியர் பணியிடம் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 23.03.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

இதையும் படியுங்கள்: சென்னை ராணுவ மருத்துவ மனையில் வேலை; 8-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிங்க!

துணை செவிலியர் (Auxiliary Nurse Midwife)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Multipurpose Health worker (Female) படிப்பு படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 14,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s37cbbc409ec990f19c78c75bd1e06f215/uploads/2023/03/2023031652.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : செயலாளர், மாவட்ட நலவாழ்வுச் சங்கம் மற்றும் துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள், துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம், தென்காசி மாவட்டம்

விண்ணப்பிக்க கடைசி தேதி : 23.03.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s37cbbc409ec990f19c78c75bd1e06f215/uploads/2023/03/2023031630.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment