திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத்துறையில் பல்வேறு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 12 ஆம் வகுப்பு படித்தவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
திருவள்ளூர் மாவட்ட பொது சுகாதாரத்துறையில் தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 10 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 23.01.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள்: சுகாதாரத்துறை வேலை வாய்ப்பு; 10-ம் வகுப்பு தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க!
முதுநிலை சிகிச்சை ஆய்வுக்கூட மேற்பார்வையாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : இளங்கலைப் பட்டம் மற்றும் Diploma course in Medical Laboratory Technology படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 19,800
ஆய்வுக்கூட நுட்புனர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 6
கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் Diploma course in Medical Laboratory Technology படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 13,000
சுகாதார பார்வையாளர் (காசநோய்)
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். மற்றும் பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் படிப்பு படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 13,300
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி : துணை இயக்குனர், மருத்துவப் பணிகள் (காசநோய்), மாவட்ட காசநோய் மையம், பூவிருந்தவல்லி, சென்னை – 600056.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 23.01.2023
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s39431c87f273e507e6040fcb07dcb4509/uploads/2023/01/2023010996.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil