Advertisment

சுகாதாரத் துறை வேலை; டிப்ளமோ படித்தவர்கள் உடனே விண்ணப்பிங்க!

திருவண்ணாமலை மாவட்ட சுகாதாரத்துறை வேலை வாய்ப்பு; டிப்ளமோ படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
05 Sep 2023 புதுப்பிக்கப்பட்டது Sep 07, 2023 11:12 IST
tn govt jobs

அரசு வேலைவாய்ப்பு

சுகாதாரத்துறையில் அருமையான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Advertisment

திருவண்ணாமலை மாவட்ட சுகாதாரத் துறையில் தேசிய நலவாழ்வு குழுமத்தில் காலியாக உள்ள மருந்தாளுனர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 13.09.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்: சமூக பாதுகாப்புத் துறையில் வேலை; 12-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிங்க!

மருந்தாளுனர் (Pharmacist)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : D.Pharm or B.Pharm படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 15,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : கௌரவச் செயலாளர்/ துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள், மாவட்ட நலவாழ்வு சங்கம், துணை சுகாதார பணிகள் அலுவலகம், பழைய அரசு மருத்துவமனை, செங்கம் ரோடு, திருவண்ணாமலை மாவட்டம் - 606603

விண்ணப்பிக்க கடைசி தேதி : 13.09.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s318997733ec258a9fcaf239cc55d53363/uploads/2023/08/2023082999.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil

#Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment