தமிழ்நாடு பொறியியல் கவுன்சலிங்கின் மூன்றாம் சுற்று முடிவடைந்துள்ள நிலையில், 1 லட்சத்திற்கும் அதிகமான இடங்கள் நிரம்பியுள்ளன.
Advertisment
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 442 பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. தற்போது மூன்று சுற்று கலந்தாய்வு முடிவடைந்துள்ள நிலையில், 1,06,641 இடங்கள் நிரம்பியுள்ளன. மூன்றாம் சுற்றில் ஒதுக்கீட்டை உறுதி செய்தவர்கள் கல்லூரிகளில் சேர்க்கைப் பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில், கல்வி ஆலோசகர் சுரேஷ் சீதாராமன் தனது யூடியூப் பக்கத்தில், இந்த ஆண்டில் பொறியியல் படிப்புக்கு ஆர்வம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், பொறியியல் படிப்புக்கு ஆர்வம் அதிகரித்து வருவது வரவேற்க கூடியது. இன்னும் 30 ஆண்டுகளில் இந்தியா பொறியியலில் மிகப்பெரிய சக்தியாக இருக்கும்.
Advertisment
Advertisements
தமிழகத்தில் உள்ள 442 பொறியியல் கல்லூரிகளில் மொத்தமாக 1,57,378 இடங்கள் உள்ளன. மூன்றாம் ரவுண்ட் முடிவடைந்த நிலையில், இதில் 1,06,096 இடங்கள் நிரம்பியுள்ளன. சிறப்பு பிரிவையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 1,06,641 இடங்கள் நிரம்பியுள்ளன. கடந்த ஆண்டை விட 14000க்கும் அதிகமான இடங்கள் நிரம்பியுள்ளன. இன்னும் துணை கலந்தாய்வு இருப்பதால் இந்த இடங்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும். அதாவது 5000 இடங்களுக்கு மேல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பொறியியல் படிக்க விருப்பம் இருந்து, இதுவரை கலந்தாய்வில் பங்கேற்காதவர்கள், விரும்பிய கல்லூரி கிடைக்காதவர்கள் துணை கலந்தாய்வு என்ற வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அடுத்ததாக மாணவர்கள் சென்னை, கோவை பகுதிகளில் படிக்க விரும்புகின்றனர். பாடப்பிரிவை பொறுத்தவரை கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த படிப்புகளுக்கு அதிக ஆர்வம் உள்ளது. 57-58% மாணவர்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த படிப்புகளை தேர்வு செய்துள்ளனர். அடுத்த இடங்களில் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், சிவில் போன்ற படிப்புகள் உள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“