Advertisment

TNPSC Group 4 Results: ஷாக்... குரூப் 4 தேர்வு முடிவு மேலும் தள்ளிவைப்பு; அதிகாரபூர்வ அறிவிப்பு

TNPSC Group 4: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தற்போது குரூப் 4 தேர்வு முடிவுகள் தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, இன்று வெளியான தகவலின்படி, 24.07.2022 அன்று நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் பிப்ரவரி 2023 இல் வெளியிடப்படும்

author-image
WebDesk
New Update
TNPSC Group 4 Results: குரூப் 4 தேர்வு ரிசல்ட் எப்போது? லேட்டஸ்ட் அப்டேட்ஸ்

TNPSC Group 4 exam result month announced : டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என தேர்வாணையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Advertisment

தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்கள் மற்றும் வி.ஏ.ஓ பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இதில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரைவாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படும். இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்றது. இந்த குரூப் 4 தேர்வு 7301 பணியிடங்களுக்கு நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்: 2022-ம் ஆண்டின் டாப் ஆன்லைன் கோர்ஸ்களின் பட்டியல்

ஆனால், பெண்கள் இடஒதுக்கீடு தொடர்பான உயர் நீதிமன்ற தீர்ப்பு காரணமாக முடிவுகள் வெளியாகுவதில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. பின்னர் தீர்ப்புக்கு ஏற்ப மாற்றங்கள் செய்யப்பட்டு குரூப் 2 ரிசல்ட் வெளியிடப்பட்டது. அப்போது டிசம்பர் மாதத்தில் குரூப் 4 தேர்வு ரிசல்ட் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ரிசல்ட் வெளியிடப்படவில்லை.

இதனிடையே டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு ரிசல்ட் வெளியிடுவது தொடர்பான முடிவை ஜனவரி 2023ல் தான் தேர்வாணையம் எடுக்க உள்ளதாக தகவல் வெளியானது. எனவே ஜனவரி இறுதியில் தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

இந்தநிலையில், தேர்வாணையம் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் தேர்வு முடிவுகள் பிப்ரவரி 2023ல் தான் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 7301 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு முடிவுகள் பிப்ரவரி 2023ல் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக குருப் 4 தேர்வுக்கான காலியிடங்களில் 2500 இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டதால், தேர்வர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் ரிசல்ட்டை எதிர்நோக்கி காத்திருந்தனர். இந்தநிலையில், தேர்வு முடிவுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது தேர்வர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே டிஎன்பிஎஸ்சி குருப் 4 தேர்வு முடிவுகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2022-ம் ஆண்டுக்கான பணியிடங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு 2500 அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து மொத்த பணியிடங்கள் 9801-ஆக அதிரித்துள்ளது. இதனிடையே டிசம்பர் 29-ந் தேதி (நேற்று) வெளியிடப்பட்ட 2023-ம் ஆண்டுக்கான திட்ட அறிக்கையில், குருப் 4 தேர்வு முடிவுகள் 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tnpsc Group4
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment