திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்க சார்பில் செந்தண்ணீர்புரம் உயர்நிலைப் பள்ளிக்கு பல ஆண்டுகளாக உட்கட்டமைப்பு வசதி மற்றும் கல்வி தரத்தை மேம்படுத்துதல் போன்ற செயல்பாடுகளுடன், பள்ளிக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. தற்பொழுது பள்ளியின் வெளிச்சுவர்களில் மக்கள் சக்தி இயக்க நிர்வாகி வெ.ரா.சந்திரசேகர் திருக்குறள்களை எழுதி இருக்கிறார்.
நம்ம ஊருப்பள்ளி என்று தனது சொந்த செலவில் திருக்குறள் எழுதிய மக்கள் சக்தி இயக்க நிர்வாகி வெ.இரா.சந்திரசேகருக்கு, மக்கள் சக்தி இயக்கம் மற்றும் பொதுமக்கள், கல்வியாளர்கள் சார்பில் பாராட்டுகள் குவிந்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil