Advertisment

UPSC சிவில் சர்வீசஸ் தேர்வு ஆண்டுக்கு இருமுறை? சவால்களும் நன்மைகளும்

UPSC சிவில் சர்வீசஸ் தேர்வு வருடத்திற்கு இருமுறையா? சவால்கள் மற்றும் நன்மைகள் என்ன?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
UPSC

UPSC சிவில் சர்வீசஸ் தேர்வு வருடத்திற்கு இருமுறையா? சவால்கள் மற்றும் நன்மைகள் என்ன?

Sakshi Saroha

Advertisment

சிவில் சர்வீசஸ் (CSE) ஆட்சேர்ப்பு சுழற்சி செயல்முறையை முடிக்க UPSC கிட்டத்தட்ட 14-15 மாதங்கள் எடுத்துக் கொள்கிறது. தேர்வு மூன்று நிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது, அவை முதற்கட்ட தேர்வு (Prelims), முதன்மைத் தேர்வு (Mains) மற்றும் ஆளுமைத் தேர்வு (Personality Test). இவற்றில் எந்த நிலையிலும் தோல்வியுற்ற விண்ணப்பதாரர், அடுத்த ஆண்டு முதல் நிலைத் தேர்வை மீண்டும் எழுத வேண்டும்.

ஆட்சேர்ப்புக்கு நீண்ட காலம் எடுத்துக் கொள்வதை விமர்சித்து, சமீபத்தில் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனிடம் (UPSC) UPSC CSE சுழற்சியை குறைக்க பாராளுமன்ற குழு பரிந்துரைத்துள்ளது.

இதையும் படியுங்கள்: TNPSC Group 4: குரூப் 4 காலியிடங்கள் மீண்டும் அதிகரிப்பு; கட் ஆஃப் குறையுமா?

“எந்தவொரு ஆட்சேர்ப்புத் தேர்வின் கால அளவும் பொதுவாக ஆறு மாதங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் மற்றும் நீடித்த ஆட்சேர்ப்புச் சுழற்சிகள் ஒரு விண்ணப்பதாரர்களின் வாழ்க்கையின் முக்கியமான ஆண்டுகளை வீணடிக்கின்றன, மேலும் அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கின்றன என்று குழு கருதுகிறது. அதன்படி, தரத்தில் சமரசம் செய்யாமல் ஆட்சேர்ப்பு சுழற்சியின் காலத்தை கணிசமாகக் குறைக்க யு.பி.எஸ்.சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கமிட்டி பரிந்துரைக்கிறது,” என்று அறிக்கை கூறுகிறது.

இருப்பினும், தரத்தில் சமரசம் செய்யாமல் இந்த சுழற்சியை ஆறு மாதங்களுக்கு குறைக்க முடியுமா?

ஸ்ரீராம் ஐ.ஏ.எஸ் நிறுவனரும் இயக்குனருமான ஸ்ரீராம் ஸ்ரீரங்கம் கூறுகையில், இந்த செயல்முறையின் நேர்மையையும் நாணயத்தையும் பராமரிக்க, ஒவ்வொரு தனிநபருக்கும் நியாயமான வாய்ப்பு வழங்கப்படுவதை உறுதி செய்வது முக்கியம். எனவே, செயல்முறையின் ஒவ்வொரு கட்டத்திற்கும் இடையிலான நேரத்தைக் குறைப்பது மிகவும் உதவியாக இருக்காது, என்றார்.

மேலும், "முழு சுழற்சியும், ஆரம்ப நிலைகளிலிருந்து இறுதி முடிவுகள் வரை, ஒரு கட்டமைக்கப்பட்ட காலவரிசையைப் பின்பற்றுகிறது. இந்த செயல்முறை பிப்ரவரியில் தொடங்கி அடுத்த ஆண்டு மே மாத இறுதியில் முடிவடையும், இடையில் பல்வேறு நிலைகள் உள்ளன. முதல் நிலைத் தேர்வு மே மாத இறுதியில் நடைபெறும், மேலும் முடிவுகள் பொதுவாக 20 நாட்களில் அறிவிக்கப்படும். முதன்மைத் தேர்வுகள் செப்டம்பரில் நடத்தப்பட்டு மதிப்பீடு மற்றும் பகுப்பாய்விற்காக பல மாதங்கள் உறுதி செய்யப்படுகிறது. இருப்பினும், தேர்வில் முக்கிய பங்கு வகிக்கும் நேர்காணல் செயல்முறைக்கு தேர்வருக்கு குறிப்பிடத்தக்க அளவு நேரம் தேவை என்பதை ஒப்புக்கொள்வது முக்கியம். முதன்மைத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் டிசம்பர் இறுதியில் இருந்து, இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும் மே இறுதி வரை, இந்த நேர்காணல் செயல்முறை கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு நீடிக்கும். கணிசமான எண்ணிக்கையிலான தேர்வர்களை முழுமையாகவும் நம்பகத்தன்மையுடனும் நேர்காணல் செய்யப்பட வேண்டியதன் காரணமாக கால அவகாசம் அவசியம்,” என்றும் ஸ்ரீரங்கம் கூறினார்.

"செயல்முறையின் ஒருமைப்பாடு மற்றும் நேர்மையைப் பேணுவது மிகவும் முக்கியமானது, ஒவ்வொரு தனிநபருக்கும் நியாயமான வாய்ப்பு வழங்கப்படுவதையும், நீதி சமரசம் செய்யப்படாமல் இருப்பதையும் உறுதிசெய்ய வேண்டும். எனவே, சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை மற்றும் தேர்வு செயல்முறையின் நேர்மையைப் பேணுவதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, நேர்காணல் செயல்முறையை அவசரப்படுத்தவோ அல்லது சுருக்கவோ கூடாது, என்றும் ஸ்ரீரங்கம் கூறினார்.

இந்திய விமானப்படையால் நடத்தப்படும் CDS, NDA மற்றும் AFCAT போன்ற UPSC நடத்தும் பிற தேர்வுகள் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்பட்டு, சிவில் சர்வீசஸ் தேர்வை விட ஒரே மாதிரியான அல்லது சிறந்த வெற்றி விகிதத்தை பிரதிபலிக்கின்றன என்று சேவை வழங்குநரான Geniehelpme இன் ஆராய்ச்சி அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

அறிக்கையின்படி, 2022 இல், சுமார் இரண்டு லட்சம் மாணவர்கள் AFCAT தேர்வில் கலந்து கொண்டனர், அவர்களில் 10,000 பேர் மட்டுமே உயர் போட்டியைக் காண்பிக்கும் AFSB நடைமுறைகளுக்கு அழைக்கப்பட்டனர். ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு இத்தேர்வில் 0.05 சதவீதம் தேர்ச்சி இருந்தது.

இதேபோல், நேஷனல் டிஃபென்ஸ் அகாடமி (NDA) தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படுகிறது, மேலும் 2022 இல், மூன்று லட்சத்திற்கும் அதிகமான ஆர்வலர்கள் தேர்வில் கலந்து கொண்டனர். சுமார் 8,509 விண்ணப்பதாரர்கள் NDA (II) 2022 எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றனர் மற்றும் 0.02 சதவீத வெற்றி விகிதத்தைப் பதிவு செய்து அந்தந்த சேவைகளுக்கான SSB நேர்காணலை எதிர்கொண்டனர்.

இதற்கிடையில், சிவில் சர்வீசஸ் 2022 இல், மொத்தம் 11.25 லட்சம் விண்ணப்பதாரர்கள் முதல்நிலைத் தேர்வை எழுதினர், 13,090 தேர்வர் முதன்மைத் தேர்வை எழுதினர், அதில் 2529 பேர் தகுதி பெற்று நேர்காணலுக்குச் சென்றனர். மொத்தம் 1022 பேர் இறுதியாக தேர்வு செய்யப்பட்டனர், தேர்ச்சி சதவீதம் 0.08.

UPSC சிவில் சர்வீசஸ் தேர்வோடு ஒப்பிடும் போது, ​​AFCAT, CDS மற்றும் NDA தேர்வுகள் மிகக் குறைவான ஆட்சேர்ப்பு சுழற்சிகளைக் கொண்டிருக்கின்றன, ஆனால் அவற்றின் தேர்வு செயல்முறை அவசரமானது என்று அர்த்தமல்ல, மாறாக நாட்டின் எல்லைகளைப் பாதுகாப்பதன் மூலம் நாட்டிற்கு சேவை செய்யும் சிறந்த திறமையான இளைஞர்களைத் தேர்ந்தெடுக்கிறது. .

"ஒரு குறுகிய ஆட்சேர்ப்பு சுழற்சி வளரும் அதிகாரிகளுக்கு ஒரு வரமாக இருக்கலாம். எதிர்காலத்தில் நாட்டை நிர்வகிப்பதற்குத் தேவையான அனைத்து முன்நிபந்தனைகளும் 7 முதல் 8 மாதங்களுக்குள் சரியாக மதிப்பீடு செய்யப்படும் வகையில் தேர்வுகள் வடிவமைக்கப்பட்டிருந்தால் இது சிறப்பானதாக அமையும்," என்று Geniehelpme ஐச் சேர்ந்தவரும் ஒரு சிவில் சர்வீசஸ் பயிற்சி ஆசிரியருமான நவீன் ப்ருதி கூறினார்.

இருப்பினும், BYJU இன் UPSC ஆசிரியரான சர்மத் மெஹ்ராஜ், ஒரு வருடத்தில் செயல்முறையை முடிக்க தேர்வு சுழற்சியைக் குறைக்க வேண்டும் என்று நம்புகிறார். ஆனால் ஆண்டுக்கு இரண்டு முறை தேர்வுகளை நடத்துவது விவேகமானதாக இருக்காது, என்றார்.

“ஆட்சேர்ப்பு நேரத்தைக் குறைக்க, தேர்வின் பாடத்திட்டத்தைக் குறைப்பதில் மாற்றங்களைச் செயல்படுத்த வேண்டும். ஒரு சமநிலையை உறுதிப்படுத்த, விருப்ப பாடங்கள் அகற்றப்பட வேண்டும். 2013 இல் செய்யப்பட்ட மாற்றங்கள் நல்லவை மற்றும் தொடர வேண்டும்,” என்று சர்மத் மெஹ்ராஜ் கூறினார்.

எனவே ஆட்சேர்ப்பு சுழற்சியை எவ்வாறு குறைக்க முடியும்?

இதை நடைமுறைப்படுத்த இரண்டு வழிகள் இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பாடத்திட்டத்தை குறைப்பது அல்லது ஒரு நாளில் நேர்காணல் நடத்தும் பேனல்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் ஒரு மாதத்தில் நேர்காணல் செயல்முறையை முடிக்க வேண்டும்.

முதல்நிலைத் தேர்வு MCQ அடிப்படையிலான தேர்வாக இருப்பதால், 15 நாட்களுக்கு மேல் மதிப்பீடு செய்யப்படக் கூடாது என ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜே.கே தாது கருத்து தெரிவித்துள்ளார். இருப்பினும், முதன்மைத் தேர்வில் உள்ள பல்வேறு பாடங்களைக் கருத்தில் கொண்டு, முடிவுகளை அறிவிப்பது ஒரே இரவில் நடக்காது.

"ஒவ்வொரு தனித்தனி தாள்களும் மிகுந்த கவனத்துடன் பாரபட்சமின்றி சரிபார்க்கப்பட்டால், முதன்மைத் தேர்வுத் தாள்களை மதிப்பிடுவதற்கு குறைந்தது இரண்டு மாதங்கள் ஆகும். நேர்காணல் சுற்றில், தலா ஆறு உறுப்பினர்கள் கொண்ட ஆறு போர்டுகள் உள்ளன; இதை 10 போர்டுகளாக அதிகரிக்கலாம், மேலும் ஒவ்வொரு நாளும் 10 விண்ணப்பதாரர்களை நேர்காணல் செய்ய இலக்கு வழங்கப்பட்டால், 10 நாட்களில் மொத்தம் 1000 விண்ணப்பதாரர்களை நேர்காணல் செய்யலாம். தற்போது, ​​நேர்காணல் செயல்முறையை முடிக்க இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிறது, பின்னர் இறுதிச் சுற்றில் தேர்வர்களைத் தேர்ந்தெடுக்க இது கணிசமாகக் குறைக்கப்படலாம்," என்று அவர் விளக்கினார்.

இதற்கிடையில், தேர்வு பாடத்திட்டத்தை குறைப்பது மற்றும் விருப்ப பாடத்தை நீக்குவது ஒரு வருடத்திற்குள் தேர்வை முடிக்க ஒரு விருப்பமாக இருக்கும் என்று பைஜூஸ் நிறுவன ஆசிரியர் மெஹ்ராஜ் கூறினார்.

"கடந்த சில ஆண்டுகளில் சமீபத்திய தேர்வு முறையைப் பார்க்கும்போது நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரைகள் பொருத்தமானவை. எல்லாவற்றையும் திணிக்காமல், ஒவ்வொன்றின் அடிப்படையையும் புரிந்து கொள்வதில் மாணவர்களின் கவனம் இருக்க வேண்டும். உதாரணமாக, விளையாட்டு ஒரு பாடப் பகுதியாக ஆர்வலர்களால் பெரும்பாலும் கவனிக்கப்படவில்லை. சமீபத்திய ஆண்டுகளில் இரண்டாவது முறையாக, விளையாட்டு தொடர்பான கேள்விகள் ஆர்வலர்களை திணறடித்துள்ளன. முன்னதாக, முதன்மைத் தேர்வில் டி.ஆர்.எஸ் மற்றும் கோல் லைன் டெக்னாலஜி பற்றிய கேள்விகள் கேட்கப்பட்டன, ஆனால் அது முற்றிலும் தொழில்நுட்ப நிலைப்பாட்டில் இருந்து கேட்கப்பட்டது. யாருக்குத் தெரியும் திரைப்படங்கள் கூட ஒரு பிரிவாக அடுத்தடுத்த ஆண்டுகளில் சேர்க்கப்படலாம். பாடத்திட்டத்தை வரையறுத்து அதை கடைபிடிப்பது அவசியம், ”என்று அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Upsc Civil Service Exam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment